டெல்லி டூ மும்பை.. இந்தியாவிலேயே நீளமான எக்ஸ்பிரஸ் சாலை.. என்னென்ன ஸ்பெஷல் பாருங்க!

Feb 13, 2023,01:16 PM IST
டெல்லி: டெல்லி - மும்பை இடையே புதிதாக அமைக்கப்படும் 1386 கிலோமீட்டர் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையின் முதல் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இந்த சாலைதான் நாட்டிலேயே மிக நீளமான எக்ஸ்பிரஸ் சாலை என்பது குறிப்பிடத்தக்கது.



ராஜஸ்தான் மாநிலம் தவுசாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்த சாலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கத்காரி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த சாலையின் விசேஷங்களைப் பட்டியலிட்டால் அதுவும் இந்த ரோடு போலவே நீண்டு கொண்டே போகிறது. வாங்க அதையும் பார்க்கலாம்.

- டெல்லி மும்பை இடையிலான இந்த சாலையானது மொத்தம் 1386 கிலோமீட்டர் தொலைவு கொண்டது.

- பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தது முதல்கட்டமான டெல்லி  - ஜெய்ப்பூர் இடையிலான 246 கிலோமீட்டர் சாலையை.



- டெல்லி தொடங்கி ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் வழியாக மகாராஷ்டிராவை இந்த சாலை அடையும். மொத்தம் 6 மாநிலங்களில் இந்த  சாலை அமைகிறது.

- இந்த சாலை செல்லும் முக்கிய நகரங்களாக  டெல்லி, இந்தூர், போபால், வதோதரா, ஜெய்ப்பூர், சூரத், மும்பை ஆகியவை அடங்கும்.

- சாலை அமைக்கும் பணிக்காக 15,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. 

- இந்த சாலை முழுமையாக தயாரான பின்னர் டெல்லி - மும்பை இடையிலான பயண நேரம் 24 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக குறையும்.



- டெல்லி - மும்பை இடையிலான  தொலைவு தற்போது உள்ள 1424 கிலோமீட்டர் என்பதிலிருந்து 1242 கிலோமீட்டராக குறையும்.

- இந்த சாலையால் 93 பொருளாதார மண்டலங்கள், 13 துறைமுகங்கள், எட்டு பெரிய விமான நிலையங்கள் உள்ளிட்டவை பயன் பெறும்.

- முழுமையான பசுமை வழிச்சாலையாக இது உருவாக்கப்படுகிறது. மொத்த நெடுஞ்சாலையிலும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. மழை நீர் சேகரிப்புக்கு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்