டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று காலை மக்கள் கண் விழித்துப் பார்த்தபோது ஊரெல்லாம் ஒரே வெள்ளக்காடாக இருந்தது. அதிகாலையிலேயே செமத்தியான மழை பெய்து வெளுத்தெடுத்து விட்டதால். பல சாலைகளில் வெள்ளப் பெருக்காக இருந்தது.
தென் மேற்குப் பருவ மழை பார்ட் பார்ட்டாக நாட்டின் பல பகுதிகளிலும் வெளுத்து வாங்கி வருகிறது. மகாராஷ்டிராவில் பெய்து வரும் கன மழைக்கு சிலர் பலியாகியுள்ளனர். மும்பை, புனே உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் இன்று காலை மழை வெளுத்து வாங்கி விட்டது. திடீர் கன மழையால் தலைநகரின் உட் பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பல இடங்களில் வெள்ளப் பெருக்காக காணப்பட்டது. சாலைகள் பல மழை நீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டது. அடர்த்தியான மேகக் கூடடம் திரண்டிருந்ததால் சாலைகளில் வெளிச்சமில்லாமல் இருளோ என்றும் இருந்தது. தலைநகர் டெல்லிக்கு வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. மழை ஜூலை 28ம் தேதி வரை தொடரும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஆனந்த் விஹார், மலாய் மந்திர், நெளரோஜி நகர், சாந்தி பாத் உள்பட பல இடங்களில் வெள்ளம் போல மழை நீர் தேங்கிக் காணப்பட்டது. நொய்டாவிலும் பல இடங்களில் கனத்த மழை பெய்துள்ளது. மழை காரணமாக பல்வேறு சாலைகளில் வெள்ளப் பெருக்கு காணப்படுவதால் போக்குவரத்து மாற்றங்களையும் டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}