டெல்லி பள்ளிகளில் மொபைல் போனுக்கு தடை.. டீச்சர்களுக்கும்தான்!

Aug 11, 2023,11:11 AM IST
டெல்லி : டெல்லியில் உள்ள பள்ளிகளில் மொபைல் போன்கள் கொண்ட வருவதற்கு மாநிலக் கல்வித்துறை இயக்குனரகம் தடை விதித்துள்ளது. அதோடு தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு மொபைல் போன் எடுத்துச் செல்ல வில்லை என்பதை பெற்றோர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் படிப்பதற்கான நல்ல சூழல்நிலையை ஏற்படுத்துவதற்காக மொபைல் போன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி இயக்குனரகம் விளக்கம் அளித்தள்ளது. இந்த மொபைல் போன் தடை மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் தான். பாடம் நடத்தம் வேளைகளில் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு ஆசிரியர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி கல்வித்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என அனைவரும் அதிகம் பயன்படுத்தும் சாதனமாக மொபைல் போன் மாறி விட்டது. நம்முடைய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் நன்மைகளும் உள்ளன. தீமைகளும் உள்ளன. அதிகமாக மொபைல் போன் பயன்படுத்துவதால் மனஅழுத்தம், சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படுவது, தூக்கமின்மை, பார்வை குறைபாடு, உயர் அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

மொபைல் போன்களால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதனால் அவர்களில் மதிப்பெண்கள் குறைகிறது. அவர்களின் படிப்பு திறன் மட்டுமின்றி நேருக்கு நேர் பார்த்து பேசும் தன்மை, மற்றவர்களுடனுனான பழக்கம் உள்ளிட்டவைகளும் குறைகிறது. தேவையற்ற புகைப்படங்கள் போன்றவற்றை ரெக்கார்ட் செய்வது, அப்லோட் செய்வது, தேவையற்ற தகவல்களை பரப்புவது உள்ளிட்டவற்றால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.

இதனால் மொபைல் போன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பள்ளிக்கு மொபைல் போன்களை எடுத்து வந்தால் அவற்றை பாதுகாக்கும் லாக்கரில் ஒப்படைத்து விட வேண்டும். பள்ளி முடிந்து செல்லும் போது அவைகள் மீண்டும் ஒப்படைக்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகங்கள் ஏற்படுத்த வேண்டும். வகுப்பறைகளுக்குள் கண்டிப்பாக மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது. ஆசிரியர்களும் பள்ளி நேரத்தில் வகுப்பறை, மைதானம், ஆய்வகங்கள், நூலகம் ஆகியவற்றில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிகளை தொடர்பு கொள்வதற்கு பள்ளிகளில் உதவி எண் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நவராத்திரி சிறப்புகள்: நவராத்திரியில் பொம்மை கொலு ஏன் வைக்கப்படுகிறது?

news

பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூக அநீதி: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

3 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!

news

இன்று நவராத்திரி 3ம் நாள்...அம்பிகை வழிபாட்டிற்கான கோலம், நிறம், பிரசாதம் முழு விபரம்

news

அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்தது... எவ்வளவு தெரியுமா?

news

தீபாவளிக்கு விஜய் குரலில் தளபதி கச்சேரியா.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப ரிலீஸ்?

news

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீஸ் சோதனையில் புரளி என கண்டுபிடிப்பு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 24, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும்

news

உஷார் மக்களே உஷார்... கோவை மற்றும் நீலகிரிக்கு வார்னிங் கொடுத்த வானிலை மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்