டெல்லி பள்ளிகளில் மொபைல் போனுக்கு தடை.. டீச்சர்களுக்கும்தான்!

Aug 11, 2023,11:11 AM IST
டெல்லி : டெல்லியில் உள்ள பள்ளிகளில் மொபைல் போன்கள் கொண்ட வருவதற்கு மாநிலக் கல்வித்துறை இயக்குனரகம் தடை விதித்துள்ளது. அதோடு தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு மொபைல் போன் எடுத்துச் செல்ல வில்லை என்பதை பெற்றோர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் படிப்பதற்கான நல்ல சூழல்நிலையை ஏற்படுத்துவதற்காக மொபைல் போன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி இயக்குனரகம் விளக்கம் அளித்தள்ளது. இந்த மொபைல் போன் தடை மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் தான். பாடம் நடத்தம் வேளைகளில் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு ஆசிரியர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி கல்வித்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என அனைவரும் அதிகம் பயன்படுத்தும் சாதனமாக மொபைல் போன் மாறி விட்டது. நம்முடைய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் நன்மைகளும் உள்ளன. தீமைகளும் உள்ளன. அதிகமாக மொபைல் போன் பயன்படுத்துவதால் மனஅழுத்தம், சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படுவது, தூக்கமின்மை, பார்வை குறைபாடு, உயர் அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

மொபைல் போன்களால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதனால் அவர்களில் மதிப்பெண்கள் குறைகிறது. அவர்களின் படிப்பு திறன் மட்டுமின்றி நேருக்கு நேர் பார்த்து பேசும் தன்மை, மற்றவர்களுடனுனான பழக்கம் உள்ளிட்டவைகளும் குறைகிறது. தேவையற்ற புகைப்படங்கள் போன்றவற்றை ரெக்கார்ட் செய்வது, அப்லோட் செய்வது, தேவையற்ற தகவல்களை பரப்புவது உள்ளிட்டவற்றால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.

இதனால் மொபைல் போன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பள்ளிக்கு மொபைல் போன்களை எடுத்து வந்தால் அவற்றை பாதுகாக்கும் லாக்கரில் ஒப்படைத்து விட வேண்டும். பள்ளி முடிந்து செல்லும் போது அவைகள் மீண்டும் ஒப்படைக்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகங்கள் ஏற்படுத்த வேண்டும். வகுப்பறைகளுக்குள் கண்டிப்பாக மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது. ஆசிரியர்களும் பள்ளி நேரத்தில் வகுப்பறை, மைதானம், ஆய்வகங்கள், நூலகம் ஆகியவற்றில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிகளை தொடர்பு கொள்வதற்கு பள்ளிகளில் உதவி எண் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!

news

வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்

news

முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்

news

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி

news

2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு

news

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!

news

டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி

news

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!

அதிகம் பார்க்கும் செய்திகள்