டெல்லி பள்ளிகளில் மொபைல் போனுக்கு தடை.. டீச்சர்களுக்கும்தான்!

Aug 11, 2023,11:11 AM IST
டெல்லி : டெல்லியில் உள்ள பள்ளிகளில் மொபைல் போன்கள் கொண்ட வருவதற்கு மாநிலக் கல்வித்துறை இயக்குனரகம் தடை விதித்துள்ளது. அதோடு தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு மொபைல் போன் எடுத்துச் செல்ல வில்லை என்பதை பெற்றோர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் படிப்பதற்கான நல்ல சூழல்நிலையை ஏற்படுத்துவதற்காக மொபைல் போன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி இயக்குனரகம் விளக்கம் அளித்தள்ளது. இந்த மொபைல் போன் தடை மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் தான். பாடம் நடத்தம் வேளைகளில் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு ஆசிரியர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி கல்வித்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என அனைவரும் அதிகம் பயன்படுத்தும் சாதனமாக மொபைல் போன் மாறி விட்டது. நம்முடைய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் நன்மைகளும் உள்ளன. தீமைகளும் உள்ளன. அதிகமாக மொபைல் போன் பயன்படுத்துவதால் மனஅழுத்தம், சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படுவது, தூக்கமின்மை, பார்வை குறைபாடு, உயர் அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

மொபைல் போன்களால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதனால் அவர்களில் மதிப்பெண்கள் குறைகிறது. அவர்களின் படிப்பு திறன் மட்டுமின்றி நேருக்கு நேர் பார்த்து பேசும் தன்மை, மற்றவர்களுடனுனான பழக்கம் உள்ளிட்டவைகளும் குறைகிறது. தேவையற்ற புகைப்படங்கள் போன்றவற்றை ரெக்கார்ட் செய்வது, அப்லோட் செய்வது, தேவையற்ற தகவல்களை பரப்புவது உள்ளிட்டவற்றால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.

இதனால் மொபைல் போன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பள்ளிக்கு மொபைல் போன்களை எடுத்து வந்தால் அவற்றை பாதுகாக்கும் லாக்கரில் ஒப்படைத்து விட வேண்டும். பள்ளி முடிந்து செல்லும் போது அவைகள் மீண்டும் ஒப்படைக்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகங்கள் ஏற்படுத்த வேண்டும். வகுப்பறைகளுக்குள் கண்டிப்பாக மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது. ஆசிரியர்களும் பள்ளி நேரத்தில் வகுப்பறை, மைதானம், ஆய்வகங்கள், நூலகம் ஆகியவற்றில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிகளை தொடர்பு கொள்வதற்கு பள்ளிகளில் உதவி எண் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்