டெல்லி: டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்கள் சனிக்கிழமை காலையில் அடர்ந்த பனி மூட்டத்துடன் அதாவது smog விழித்தெழுந்தனர்.
ஒட்டுமொத்த காற்றுத் தரமும் தீவிரம் Severe என்ற நிலையை நெருங்கி உள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, காலை 8 மணி அளவில் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு (AQI) 390 ஆக இருந்தது. இது மிகவும் மோசம் என்ற பிரிவில் வருகிறது.
தேசிய தலைநகரில் பல பகுதிகளில் காற்றுத் தரம் தீவிரம் என்ற பிரிவில் இருந்தது. குறிப்பாக ஆனந்த் விஹார், புராரி கிராசிங், சாந்தினி சௌக், காஜிபூர், ஜஹாங்கிர்புரி, ஆர்.கே. புரம், ரோகிணி ஆகிய பகுதிகளில் நிலை தீவிரம் என்ற அளவில் இருந்தது.

அதிகாலையில் அடர்ந்த புகை மூட்டம் மற்றும் லேசான பனி மூட்டம் காரணமாக டெல்லியின் பல பகுதிகளில் எதிரில் இருப்பவர்கள் தெளிவாக தெரியாத நிலையே காணப்பட்டது.
இருப்பினும் அடர்ந்த பனி மூட்டம் காரணமாக டெல்லியில் விமான சேவை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.
தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை... வெள்ளியின் விலையும் சற்று குறைவு தான்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
கண்ணீரைத் துடைக்க.. இறைவனே இறங்கி வந்து நிற்பான்!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
புட்டு சாப்பிட்டிருப்பீங்க.. முள்ளங்கி புட்டு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா.. செமத்தியான டிஷ்!
வைகறை அழகு.. அந்திபொழுது அழகு.. கறவைகளுடன்.. சேயுமழகு!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 13, 2025... இன்று முயற்சிகள் கைகொடுக்கும்
டெல்லியிலும், சுற்று வட்டாரத்திலும்.. விடிஞ்சு வந்து பார்த்தா.. ஒரே smog.. இயல்பு நிலை பாதிப்பு
{{comments.comment}}