சென்னை: தனிநபர்கள் சுய உதவிக் குழுக்கள், போன்றவற்றிற்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கடன் வசூல் செய்வது தொடர்பாக பேரவையில் இன்று புதிய மசோதாவை தாக்கல் செய்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 14ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இன்றைய பேரவை கூட்டத்தில் கேள்வி நேரம் முடிந்ததும், தனி நபர்கள் சுய உதவிக் குழுக்கள் போன்றவற்றிற்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கடனை வசூலிப்பதால் அப்பாவி மக்கள் தற்கொலை முயற்சி வரை சென்று பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனை தடுக்க புதிய மசோதா ஒன்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
அதன்படி, கடனை கட்டாயமாக வசூலித்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறைதண்டனை வழங்கப்படும். இந்த வழக்கு தொடர்பாக பிணையில் வெளியில் வர முடியாது.
மீறி கட்டாயமாக கடனை வசூலித்து கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடனை வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூங்கியதாக வழக்கு பதிவு செய்யப்படும். அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
கடன் பெற்றவரையோ, அவரது குடும்பத்தினரையோ நிறுவனங்கள் மிரட்டவோ, பின் தொடரவோ அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. மேலும் கடன் பெறுவோருக்கும், கடன் வழங்கும் நிறுவனத்திற்கும், இடையே உள்ள பூசல்களை தீர்த்து வைக்க குறை தீர்ப்பாயம் ஒன்றை அரசு நியமிக்கலாம் எனவும் சட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
WTC 2025 Finals: உலக டெஸ்ட் சாம்பியன் தென் ஆப்பிரிக்கா.. ஆஸ்திரேலியாவை வச்சு செய்து அபாரம்!
Dubai fire: துபாய் .. 67 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. உயிர் அபாயம் ஏதுமில்லை
இஸ்ரேல் தாக்குதல் : ஈரானில் இருந்து வெளியே முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள்
சரமாரியான தாக்குதலால்.. தீவிரமடையும் இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் .. இந்தியா யார் பக்கம்?
இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம்.. பயணங்கள் தாமதமாகலாம் or ரத்தாகலாம்.. இண்டிகோ தகவல்
ஏர்இந்தியா விமான விபத்து பற்றி 3 மாதங்களுக்குள் விசாரிக்கப்படும் - அமைச்சர் ராம் மோகன் நாயுடு
ஏர் இந்தியா விமான விபத்து ஒரு சைபர் தாக்குதலா?... சந்தேகம் கிளப்பும் சிவசேனா !
இஸ்ரேல் தாக்குதலில் பலியான முப்படைத் தளபதி.. புதிய ராணுவ தளபதியை அறிவித்த ஈரான்
பற்றி எரியும் மத்திய கிழக்கு.. அனல் பறக்கும் சண்டையில் இஸ்ரேல் - ஈரான்.. மக்கள் பரிதவிப்பு!
{{comments.comment}}