வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

Apr 26, 2025,08:32 PM IST

சென்னை: தனிநபர்கள் சுய உதவிக் குழுக்கள், போன்றவற்றிற்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கடன் வசூல் செய்வது தொடர்பாக பேரவையில் இன்று புதிய மசோதாவை தாக்கல் செய்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.


தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 14ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்  தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இன்றைய பேரவை கூட்டத்தில் கேள்வி நேரம் முடிந்ததும், தனி நபர்கள் சுய உதவிக் குழுக்கள் போன்றவற்றிற்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கடனை வசூலிப்பதால் அப்பாவி மக்கள் தற்கொலை முயற்சி வரை சென்று பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனை தடுக்க புதிய மசோதா ஒன்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். 




அதன்படி, கடனை கட்டாயமாக வசூலித்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறைதண்டனை வழங்கப்படும். இந்த வழக்கு தொடர்பாக  பிணையில் வெளியில் வர முடியாது.


மீறி கட்டாயமாக கடனை வசூலித்து கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடனை வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூங்கியதாக வழக்கு பதிவு செய்யப்படும். அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.


கடன் பெற்றவரையோ,  அவரது குடும்பத்தினரையோ நிறுவனங்கள் மிரட்டவோ, பின் தொடரவோ அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. மேலும் கடன் பெறுவோருக்கும், கடன் வழங்கும் நிறுவனத்திற்கும், இடையே உள்ள பூசல்களை தீர்த்து வைக்க குறை தீர்ப்பாயம் ஒன்றை அரசு நியமிக்கலாம் எனவும் சட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு திமுக  நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உங்களுடன் ஸ்டாலின்.. முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை.. சி.வி. சண்முகத்திற்கும் Fine!

news

அன்புமணி அறிவித்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி டாக்டர் ராமதாஸ் வழக்கு

news

ஆகஸ்ட் 9ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

சிறப்பு எஸ்.ஐ., கொலை... எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை கண்டனம்!

news

ஆகஸ்ட் 17ம் தேதி பொதுக்குழுவைக் கூட்ட இது தான் காரணமா?.. டாக்டர் ராமதாசின் அடுத்த அதிரடி

news

உடுமலை அருகே எஸ்ஐ சண்முகவேல் வெட்டிக்கொலை: 5 தனிப்படைகள் அமைப்பு

news

ஓபிஎஸ் எக்ஸ் பக்கத்தைக் கவனித்தீரா.. 2 நாட்களாக ஒருவரை மட்டுமே வறுக்கிறார்.. யாரைத் தெரியுமா?

news

தவெக மாநில மாநாடு.. புதிய தேதியை அறிவித்த விஜய்.. எப்போது கிடைக்கும் அனுமதி?

news

ராமதாஸ் போன் ஒட்டுக்கேட்பு.. போலீசில் புகார்.. அதிரடி காட்டும் தைலாபுரம்.. அடுத்து என்ன நடக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்