வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

Apr 26, 2025,08:32 PM IST

சென்னை: தனிநபர்கள் சுய உதவிக் குழுக்கள், போன்றவற்றிற்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கடன் வசூல் செய்வது தொடர்பாக பேரவையில் இன்று புதிய மசோதாவை தாக்கல் செய்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.


தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 14ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்  தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இன்றைய பேரவை கூட்டத்தில் கேள்வி நேரம் முடிந்ததும், தனி நபர்கள் சுய உதவிக் குழுக்கள் போன்றவற்றிற்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கடனை வசூலிப்பதால் அப்பாவி மக்கள் தற்கொலை முயற்சி வரை சென்று பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனை தடுக்க புதிய மசோதா ஒன்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். 




அதன்படி, கடனை கட்டாயமாக வசூலித்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறைதண்டனை வழங்கப்படும். இந்த வழக்கு தொடர்பாக  பிணையில் வெளியில் வர முடியாது.


மீறி கட்டாயமாக கடனை வசூலித்து கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடனை வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூங்கியதாக வழக்கு பதிவு செய்யப்படும். அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.


கடன் பெற்றவரையோ,  அவரது குடும்பத்தினரையோ நிறுவனங்கள் மிரட்டவோ, பின் தொடரவோ அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. மேலும் கடன் பெறுவோருக்கும், கடன் வழங்கும் நிறுவனத்திற்கும், இடையே உள்ள பூசல்களை தீர்த்து வைக்க குறை தீர்ப்பாயம் ஒன்றை அரசு நியமிக்கலாம் எனவும் சட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு திமுக  நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்