வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

Apr 26, 2025,08:32 PM IST

சென்னை: தனிநபர்கள் சுய உதவிக் குழுக்கள், போன்றவற்றிற்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கடன் வசூல் செய்வது தொடர்பாக பேரவையில் இன்று புதிய மசோதாவை தாக்கல் செய்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.


தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 14ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்  தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இன்றைய பேரவை கூட்டத்தில் கேள்வி நேரம் முடிந்ததும், தனி நபர்கள் சுய உதவிக் குழுக்கள் போன்றவற்றிற்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கடனை வசூலிப்பதால் அப்பாவி மக்கள் தற்கொலை முயற்சி வரை சென்று பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனை தடுக்க புதிய மசோதா ஒன்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். 




அதன்படி, கடனை கட்டாயமாக வசூலித்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறைதண்டனை வழங்கப்படும். இந்த வழக்கு தொடர்பாக  பிணையில் வெளியில் வர முடியாது.


மீறி கட்டாயமாக கடனை வசூலித்து கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடனை வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூங்கியதாக வழக்கு பதிவு செய்யப்படும். அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.


கடன் பெற்றவரையோ,  அவரது குடும்பத்தினரையோ நிறுவனங்கள் மிரட்டவோ, பின் தொடரவோ அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. மேலும் கடன் பெறுவோருக்கும், கடன் வழங்கும் நிறுவனத்திற்கும், இடையே உள்ள பூசல்களை தீர்த்து வைக்க குறை தீர்ப்பாயம் ஒன்றை அரசு நியமிக்கலாம் எனவும் சட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு திமுக  நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மக்களே உஷார்...இன்று இரவு கரையை கடக்கிறது மோன்டா புயல்

news

திருச்செந்தூரில் நடைபெறும் சாயா அபிஷேகம் பற்றி தெரியுமா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 28, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிகள்

news

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!

news

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!

news

மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்

news

பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்

news

நடித்தாலே நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது... இது ரொம்ப கொடுமையானது: சீமான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்