இமாச்சல், உத்தரகாண்டிற்கு ரெட் அலர்ட்.. 4 நாட்களுக்கு மழை வெளுக்க போகுதாம்

Jul 12, 2023,01:03 PM IST
டெல்லி : இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்பதால் இந்த மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

வடஇந்தியாவின் பல பகுதிகளில் தொடர்ந்து நான்காவது நாளாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மண்சரிவு, வெள்ளப் பெருக்கு ஆகியன ஏற்பட்டு, ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். தரைப் பாலங்கள் பலவும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் போக்குவரத்து பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. 




கனமழையால் இமாச்சல பிரதேசம் தான் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்டில் 5 பேரும், உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தானில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இமாச்சல பிரதேசத்தின் குளு பகுதியில் மட்டும் இதுவரை 40 கடைகள், 30 வீடுகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த மழைக்கு இதுவரை ரூ.3000 முதல் 4000 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், அரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 4 மாநில்களில் மிக கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இந்நிலையில் இமாச்சல பிரதேசம் மற்றும் உத்திரகாண்டின் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை வரை மக்கள் பயணம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி

news

தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்