சென்னை வரும் வெளியூர் பஸ்கள்...இனி இந்த பக்கம் தான் வரும்:  அரசு உத்தரவு

Feb 17, 2023,03:54 PM IST
சென்னை : வெளியூரில் இருந்து சென்னை வரும் பஸ்கள் செல்லும் வழி தடம், கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பினை தமிழக போக்குவரத்துறை இன்று வெளியிட்டுள்ளது.



போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள உத்தரவில், வெளியூரில் இருந்து சென்னை வரும் அரசு பஸ்கள் பகலில் இனி தாம்பரம் வழியாக செல்லலாம். அனைத்து ஊர்களில் இருந்து சென்னை வரும் அரசு பஸ்கள் தாம்பரம் வழியாக இயக்கப்படும். 



தாம்பரம் பஸ் ஸ்டாப்பிற்கு இடது புறமாக நிறுத்தி பணிகளை இறக்கிவிட வேண்டும். மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக வரும் பஸ்கள் மட்டும் மதுரவாயல் வழியாக கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிற்கு இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து கிளை மேலாளர்கள், அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆகியோருக்கு போக்குவரத்து துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் இரவு நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

முன்பு இப்படித்தான் பஸ்கள் வந்து போய்க் கொண்டிருந்தன. அதை பின்னர் மாற்றினார்கள். இப்போது திரும்பவும் அதேபோன்று மாற்றம் செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!

news

சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி

news

முதல்வர் விஜய் சொன்ன 'பார்ட்டி ஃபண்ட்'...திமுக கொந்தளித்து வெளிநடப்பு செய்தது ஏன்?

news

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. செப்டம்பர் 15ல் தொடக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு

news

மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை ஜூன் 25-ல் வெளியீடு: அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு

news

திருவள்ளூர் அமோனியா கசிவு விவகாரம்: முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்

news

Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?

news

அலைபேசி பேச்சு

news

அது ஒரு அழகிய மழைக்காலம்

அதிகம் பார்க்கும் செய்திகள்