அரசியலிலிருந்து எதியூரப்பா ஓய்வு..  இறுதிவரை பாஜகவுக்காக பாடுபடுவேன் என உறுதி!

Feb 25, 2023,11:31 AM IST
பெங்களூரு:  தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா அறிவித்துள்ளார். இருப்பினும் இறுதி மூச்சு வரை பாஜகவுக்காக பாடுபடுவேன் என்றும் அவர் உறுதியுடன் கூறியுள்ளார்.



தென் இந்தியாவின் முதல் பாஜக முதல்வர் என்ற பெயரும், பெருமையும் எதியூரப்பாவுக்கு உண்டு. கர்நாடகத்தின் முதல்வராக இருந்தவர். கர்நாடக பாஜகவின் தலைவராக திகழ்ந்தவர். கர்நாடகத்தின் முக்கியமான ஜாதியான லிங்காயத்து சமுதாயத்தினரை பாஜகவின் வாக்கு வங்கியாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவர். கர்நாடகத்தில் பாஜக வலுவான நிலையை அடைய எதியூரப்பாவின் தலைமையும், வழிகாட்டுதலும் தான் முக்கியக் காரணம்.



இடையில் கட்சியுடன் ஏற்பட்ட கசப்புணர்வின் காரணமாக தனிக்கட்சி நடத்தினார். பின்னர் மீண்டும் பாஜகவில் இணைந்தார். ஆனால் மீண்டும் பாஜக ஆட்சியமைத்தபோது எதியூரப்பாவுக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை. அவருக்கு ஆளுநர் பதவி கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தீவிர அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் எதியூரப்பா.

சட்டசபையில் நேற்று அவர் பேசியபோது இந்த அறிவிப்பை வெளியிட்டார். எதியூரப்பா கூறுகையில்,  தீவிர அரசியலிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். இருப்பினும் பாஜகவுக்காக எனது இறுதி மூச்சு வரை பாடுபடுவேன். பாஜக வெல்ல வேண்டும். அதற்காக தொடர்ந்து உழைப்பேன்.  பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதே எனது ஒரே நோக்கமாகும். அது நடப்பதை நான் உறுதி செய்வேன்.

நான் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன். இது எனது பிரியாவிடைப் பேச்சு. எனக்கு பேச அனுமதி அளித்த அனைவருக்கும் நன்றி என்றார் எதியூரப்பா. இந்த அறிவிப்பின் மூலம் கர்நாடக அரசியலின் மிக முக்கிய ஆளுமைகளில் ஒன்றின் அரசியல் செயல்பாடுகள் முடிவுக்கு வருகின்றன. அதேசமயம், இவரை விட மூத்தவரான முன்னாள் பிரதமர் தேவெ கெளடா இன்னும் தீவிர அரசியலில் இருக்கிறார், ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதியூரப்பா 4 முறை கர்நாடக முதல்வராக இருந்துள்ளார். 3 முறை கர்நாடக எதிர்க்கட்சித் தலைவராக திகழ்ந்துள்ளார். இவரது மனைவி பெயர் மைத்ராதேவி. இந்தத் தம்பதிக்கு 3 மகள்கள் அருணாதேவி, பத்மாவதி, உமாதேவி, 2 மகன்கள்  - ராகவேந்திரா, விஜயேந்திரா உள்ளனர். மனைவி ஏற்கனவே இறந்து விட்டார்.

சமீபத்திய செய்திகள்

news

Dubai fire: துபாய் .. 67 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. உயிர் அபாயம் ஏதுமில்லை

news

இஸ்ரேல் தாக்குதல் : ஈரானில் இருந்து வெளியே முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள்

news

சரமாரியான தாக்குதலால்.. தீவிரமடையும் இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் .. இந்தியா யார் பக்கம்?

news

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம்.. பயணங்கள் தாமதமாகலாம் or ரத்தாகலாம்.. இண்டிகோ தகவல்

news

காதலிக்க நேரமில்லை.. காதலிப்பார் யாருமில்லை.. கண்ணதாசன் படைத்த காவியக் காதல் விருந்து!

news

ஏர்இந்தியா விமான விபத்து பற்றி 3 மாதங்களுக்குள் விசாரிக்கப்படும் - அமைச்சர் ராம் மோகன் நாயுடு

news

படோடி கோப்பையைக் கைவிட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.. விளக்கம் கொடுத்த பிசிசிஐ!

news

ஏர் இந்தியா விமான விபத்து ஒரு சைபர் தாக்குதலா?... சந்தேகம் கிளப்பும் சிவசேனா !

news

இஸ்ரேல் தாக்குதலில் பலியான முப்படைத் தளபதி.. புதிய ராணுவ தளபதியை அறிவித்த ஈரான்

அதிகம் பார்க்கும் செய்திகள்