பொங்கல் விழா.. களைகட்டியது.. தேவகோட்டையில் சமத்துவ பொங்கல் வைத்து மகிழ்ந்த மாணவர்கள்.. !

Jan 11, 2024,04:37 PM IST

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. 


இதில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமையில் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.


தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. கதிரவனுக்கும், உழவுத் தொழிலுக்கும் நன்றி செலுத்தும் வகையில் நாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்கிறோம்.இது மட்டுமல்லாமல் மாட்டுப்பொங்கல் அன்று ஒவ்வொரு பகுதியிலும் பெண்களுக்கான கோலம் போட்டி, ஓவியப்போட்டி, கரும்பு உடைத்தல் போட்டி, விளையாட்டுப் போட்டிகள் போன்றவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். 




ஆண்களின் வீரத்தை பறைசாற்றும் விதமாக காளைகளை அடக்குதல், மஞ்சுவிரட்டு, கபடி போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டு கௌரவிக்கப்படும். கிராமங்களில் வருடா வருடம் பொங்கலை சிறப்பிக்க கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.


இந்நிலையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது .இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று சொல்லி மகிழ்ந்தனர். சத்துணவு ஊழியர்கள் சார்பாக சர்கரை பொங்கல் சமைத்து மாணவருக்கு வழங்கப்பட்டது.




இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கான கோலப்போட்டி, விளையாட்டுப் போட்டி,பேச்சுப்போட்டி, போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது . மாணவியர்களுடன் மாணவர்களும் சேர்ந்து கோலம் போட்டு அசத்தினர்.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  விழாவின் முடிவில் பரிசும் வழங்கப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

news

தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?

news

ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்

news

எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?

news

விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி

news

இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்

news

திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!

news

எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்

news

நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்