இயக்குனர்  நடிகை தயாரிப்பாளர் ஜெயதேவி மறைந்தார்!

Oct 04, 2023,12:15 PM IST
சென்னை: பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான ஜெயதேவி இன்று அதிகாலை காலமானார்.

நடிகையாக அறிமுகமாகி, பின்னர் இயக்குநராக, தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தவர் ஜெயதேவி. பல வெற்றிப் படங்களை இயக்கியும், தயாரித்தும் உள்ளார்.  62 வயதான ஜெயதேவி, சென்னை போரூர் சமயபுரம் நகரில் வசித்து வந்தார்.





இவர் கேமராமேன் - இயக்குநர் வேலு பிரபாகரனின் முதல் மனைவி ஆவார். வேலு பிரபாகரன் நடித்த புரட்சிக்காரன் என்ற படத்திற்கு கதை, வசனம் எழுதியுள்ளார். ஜெயதேவி 1960 இல் நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்கினார். 80களில் வெளியான வாழ நினைத்தால் வாழலாம், வா இந்த பக்கம், ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது  போன்ற படங்களை தயாரித்தவர் ஜெயதேவி. 

இவர் தான் இயக்கிய படங்களில் மட்டுமே நடித்தவர். வெளிப்படங்களில் நடித்ததில்லை. நூற்றுக்கணக்கான முறை மேடையேறி ஏராளமான நாடகங்களையும், நடன நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றி உள்ளார். நடிக்க ஆரம்பித்த பிறகு நடிப்பதுடன் மட்டுமல்லாமல் தொழில்நுட்பங்களை கற்பதிலும் ஆர்வம் காட்டினார். ஆண் இக்குநர்களே கோலோச்சி வந்த சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டவர்.



சில ஆண்டு காலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜெயதேவி பின்னர் நடிகை குஷ்புவை வைத்து பவர் ஆஃப் உமன் என்ற படத்தை இயக்கினார். இப்படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான தமிழக அரசின் விருது கிடைத்தது.

ஜெயதேவியை விட்டுப் பிரிந்த பின்னர் இயக்குநர் வேலு பிரபாகரன், தன்னை விட பாதி வயதே கொண்ட நடிகை ஷெர்லியை மணந்து கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்