ஈரோடு கிழக்கில் தேமுதிக தனித்துப் போட்டி.. வேட்பாளர் இவர்தான்!

Jan 23, 2023,03:10 PM IST
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர் பெயரையும் வெளியிட்டுள்ளது.


ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். மறுபுறம் அதிமுக கூட்டணி சார்பில் அதிமுக போட்டியிடும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிலை தெரியவில்லை. இதற்கிடையே, விஜயகாந்த்தின் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதை அறிவித்த அக்கட்சியின் தலைவர் பொருளாளர் மனைவி பிரேமலதா விஜயகாந்த், வேட்பாளராக ஆனந்த் போட்டியிடுவார் என்றும் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், அதிமுக பல பிரிவுகளைக உடைந்து விட்டது. சின்னம் கிடைக்குமா என்று தெரியவில்லை. தேமுதிகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நாங்கள் எந்தக் கூட்டணியிலும் தற்போது இல்லை என்றார்.

ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளராக தற்போது இருக்கிறார் ஆனந்த். எம்.எஸ்சி படித்தவர். 2011ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஈரோடு  கிழக்குத் தொகுதியில் தேமுதிக வென்றது என்பது நினைவிருக்கலாம். அப்போது வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்றார். அதிமுகவுடன் அத்தேர்தலில் தேமுதிக கூட்டணி வைத்திருந்தது. பின்னர் சந்திரகுமார் திமுகவில் போய் இணைந்து விட்டார்.

தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ், அதிமுக,  தேமுதிக, நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டிக்கு இங்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!

news

பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!

news

வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

news

மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!

news

திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!

news

ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!

news

Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!

news

சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!

news

Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்