ஈரோடு கிழக்கில் திமுகவே போட்டியிடுகிறது.. வி.சி. சந்திரகுமார் வேட்பாளர்..முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Jan 11, 2025,10:14 AM IST

 ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி சந்திரகுமார் வேட்பாளராக போட்டியிடுவார் என திமுக தலைவர் முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இருந்து வந்தார். சமீபத்தில் அவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து அந்தத் தொகுதிக்கு தற்போது இடைத் தேர்தல் வந்துள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.  


ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது வேட்பு மனு தாக்கலும் தொடங்கியுள்ளது. ஜனவரி 17 ஆம் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம். தொடர்ந்து ஜனவரி 18ல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்கள் வாபஸ் பெற ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாளாகும்.




இந்த நிலையில் ஈரோடு கிழக்கில் திமுகவே போட்டியிட விரும்புவதாக தகவல்கள் வெளியாகின. காரணம், காங்கிரஸ் தரப்பில் வலுவான வேட்பாளர் இல்லாத நிலையில் சிக்கலாகி விடக் கூடாது என்பதால் திமுக தானே போட்டியிட விரும்பியது. இதற்குப் பதில் வருகிற சட்டசபை பொதுத் தேர்தலில் காங்கிரஸுக்கு கூடுதல் தொகுதியை ஒதுக்கவும் திமுக முன்வந்ததாக கூறப்படுகிறது. 


இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கில் திமுகவே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கலந்து பேசியதில், திராவிட முன்னேற்றக் கழகம், இந்த தொகுதியில் போட்டியிடுவதாக முடிவு எடுக்கப்பட்டது.


வருகிற 05-02-2025 அன்று நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக, திரு. வி.சி.சந்திரகுமார் (தி.மு.க.கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்) அவர்கள் போட்டியிடுவார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தேமுதிகவிலிருந்து விலகி வந்தவர்


வி.சி சந்திரகுமார் தேமுதிகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவர். கடந்த 2011 முதல் 2016 வரை ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேமுதிக சார்பில் எம்எல்ஏவாக பணியாற்றியவர். தேமுதிகவின் முதல் எம்எல்ஏக்களில் இவரும் ஒருவர். விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்ட பின்னர் ஆக்டிவ் அரசியலை விட்டு விலகியிருந்த சந்திரகுமார் பின்னர் திமுகவில் இணைந்தார்.


திமுகவில் அவர் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். நீண்ட காலமாக உரிய அங்கீகாரத்துக்காகக் காத்திருந்தார். தற்போது அது அவருக்குக் கிடைத்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்