ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி சந்திரகுமார் வேட்பாளராக போட்டியிடுவார் என திமுக தலைவர் முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இருந்து வந்தார். சமீபத்தில் அவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து அந்தத் தொகுதிக்கு தற்போது இடைத் தேர்தல் வந்துள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது வேட்பு மனு தாக்கலும் தொடங்கியுள்ளது. ஜனவரி 17 ஆம் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம். தொடர்ந்து ஜனவரி 18ல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்கள் வாபஸ் பெற ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாளாகும்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கில் திமுகவே போட்டியிட விரும்புவதாக தகவல்கள் வெளியாகின. காரணம், காங்கிரஸ் தரப்பில் வலுவான வேட்பாளர் இல்லாத நிலையில் சிக்கலாகி விடக் கூடாது என்பதால் திமுக தானே போட்டியிட விரும்பியது. இதற்குப் பதில் வருகிற சட்டசபை பொதுத் தேர்தலில் காங்கிரஸுக்கு கூடுதல் தொகுதியை ஒதுக்கவும் திமுக முன்வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கில் திமுகவே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கலந்து பேசியதில், திராவிட முன்னேற்றக் கழகம், இந்த தொகுதியில் போட்டியிடுவதாக முடிவு எடுக்கப்பட்டது.
வருகிற 05-02-2025 அன்று நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக, திரு. வி.சி.சந்திரகுமார் (தி.மு.க.கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்) அவர்கள் போட்டியிடுவார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேமுதிகவிலிருந்து விலகி வந்தவர்
வி.சி சந்திரகுமார் தேமுதிகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவர். கடந்த 2011 முதல் 2016 வரை ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேமுதிக சார்பில் எம்எல்ஏவாக பணியாற்றியவர். தேமுதிகவின் முதல் எம்எல்ஏக்களில் இவரும் ஒருவர். விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்ட பின்னர் ஆக்டிவ் அரசியலை விட்டு விலகியிருந்த சந்திரகுமார் பின்னர் திமுகவில் இணைந்தார்.
திமுகவில் அவர் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். நீண்ட காலமாக உரிய அங்கீகாரத்துக்காகக் காத்திருந்தார். தற்போது அது அவருக்குக் கிடைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பொறுமையை சோதிக்கும் கூட்டணிக் கட்சிகள்.. அமைதியாக இருக்கும் திமுக.. என்ன நடக்கும்?
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட்:பிப்ரவரி 12ல் மதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ
தமிழகத்தில் ஆட்சியாளர்களை எதிர்த்து எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது: ஜி.கே.வாசன் பேட்டி
ராமதாஸ் பாமக வந்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்...திருமாவளவன் உறுதி
கிச்சனில் இருக்கும்போது கவனம் தோழியரே.. எண்ணெய் தீ விபத்தை.. தடுப்பது எப்படி?
ஒரு வாரத்துக்கு நகைக் கடை பக்கமே போகாமல் இருந்தால் தங்கம் விலை குறையுமா!?
பிப்ரவரி 17-ல் தமிழக இடைக்கால பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
இந்திய சீனியர் அணிக்கு வைபவ் வர முடியாது.. குறுக்கே நிற்கும் கெளஷிக் (ஐசிசி விதி)!
முகம்து சிராஜுக்கு அடித்த லக்கி பிரைஸ்.. ராணா வெளியேறினார்.. சிராஜுக்கு வாய்ப்பு!
{{comments.comment}}