சென்னை: சென்னையில் திமுக மாணவர் அணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சட்டசபையில் கடந்த 28ம் தேதி மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். நீட் தேர்வில் குளறுபடிகளை தொடர்ந்து நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகள் கிளம்பியுள்ளன.

இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழ்நாட்டில் திமுக மாணவர் அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணிச் செயலாளர் சிவிஎம்பி எழிலரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக மாணவர் அணியின் தலைவர் இரா.ராஜீவ்காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள திமுக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி பேரூர் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் உள்ள தமிழ் மாணவர் மன்ற நிர்வாகிகள் பல்லாயிரக்கணக்கான கலந்து கொண்டனர்.
ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம், தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை!
சென்னை டூ பெங்களூரு, ஹைதராபாத் இடையே அதிக வேக ரயில் வழித் தடம் - பட்ஜெட்டில் அறிவிப்பு
பட்ஜெட் 20226-27ல் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள் - பழவேற்காட்டில் பறவைகள் சுற்றுலாத் திட்டம்
மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமையில் ஏற்றம் காணும் பங்குச் சந்தைகள்
மத்திய பட்ஜெட்: ஏன் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது?
ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் - இது முதல் முறையா? பட்ஜெட் பாரம்பரியம் என்ன?
புடவையில் அடையாளம் சொல்லும் நிர்மலா சீதாராமன்...இந்த முறை தமிழ்நாடு காஞ்சிபுரம் பட்டு
தில்லை புராணம் கூறும் தைப்பூசத் திருநாள் சிறப்புகள்.. இத்தனையும் ஒரே நாளில் நடந்தவையா?
சட்டசபை தேர்தலை குறிவைத்த மத்திய பட்ஜெட் 2026 : தமிழ்நாட்டுக்கு பல புதுத் திட்டங்கள் அறிவிப்பு
{{comments.comment}}