சென்னை: சென்னையில் திமுக மாணவர் அணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சட்டசபையில் கடந்த 28ம் தேதி மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். நீட் தேர்வில் குளறுபடிகளை தொடர்ந்து நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகள் கிளம்பியுள்ளன.
இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழ்நாட்டில் திமுக மாணவர் அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணிச் செயலாளர் சிவிஎம்பி எழிலரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக மாணவர் அணியின் தலைவர் இரா.ராஜீவ்காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள திமுக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி பேரூர் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் உள்ள தமிழ் மாணவர் மன்ற நிர்வாகிகள் பல்லாயிரக்கணக்கான கலந்து கொண்டனர்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}