சென்னை: சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி திமுக இளைஞர் அணியின் மாநில மாநாடு நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
திமுக இளைஞர் அணி தலைவராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். இந்தப் பதவியை முன்பு வகித்து வந்தவர் மு.க.ஸ்டாலின். நீண்ட காலம் இளைஞர் அணிக்குத் தலைமை தாங்கி வந்த ஸ்டாலின் அந்தப் பதவியில் இருந்தபடியே அமைச்சர், மாநகராட்சி மேயர், துணை முதல்வர், திமுக செயல் தலைவர் என்று பல்வேறு பொறுப்புகளையும் வகித்தார்.

திமுக இளைஞர் அணி தொடங்கி கிட்டத்தட்ட 27 வருடமாக எந்தவிதமான மாநிலமாநாடும் நடத்தப்பட்டதில்லை. அந்த நிலையில் முதல் முறையாக கடந்த 2007ம் ஆண்டுதான் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அதன் பிறகு மீண்டும் மாநில மாநாடு நடத்தப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான் தற்போது 2வது மாநில மாநாடு நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.

அதன்படி டிசம்பர் 17ம் தேதி சேலத்தில் 2வது இளைஞர் அணி மாநில மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் தலைமையின் கீழ் திமுக இளைஞர் அணி வந்த பிறகு நடைபெறவுள்ள முதல் மாநில மாநாடு என்பதால் மிகப் பெரிய அளவில் மாஸ் காட்ட திமுக இளைஞர் அணி திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மாநாட்டிற்கு வருவார்கள் என்று இளைஞர் அணி நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!
வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்
முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி
2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!
{{comments.comment}}