சென்னை: தமிழ்நாட்டில் அரசியல் நெருக்கடியோ, மறு தேர்தலோ நடப்பதை திமுக விரும்பவில்லை. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அவர் ஆட்சி அமைக்க திமுக தடையாக இருக்காது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, அடுத்த 6 மாதங்களுக்கு அவர்களுக்கு எந்தவிதமான அரசியல் நெருக்கடியும் அல்லது தொந்தரவும் கொடுக்காமல் திமுக பொறுமை காக்கும்.
காலை உணவுத் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆகிய திட்டங்களை புதிய அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்கும் அல்லது கூட்டணி அமைக்கும் என நிலவிய வதந்திகளை திட்டவட்டமாக மறுக்கிறேன். மக்கள் வழங்கிய தீர்ப்பின்படி, திமுக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
விஜய் அறிவித்துள்ள ரூ. 2,500 மகளிர் உதவித்தொகை மற்றும் 6 இலவச சிலிண்டர் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கடினம் என்றாலும், அவர்கள் அதைச் செய்தால் மகிழ்ச்சிதான் அல்லது குறைந்தபட்சம் நாங்கள் கொடுத்ததைத் தொடர்ந்தாலே போதும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், திமுக ஒரு முதிர்ச்சியான எதிர்க்கட்சியாகச் செயல்படத் தயாராகி வருவதை இந்த அறிக்கை காட்டுகிறது.
தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை
முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு
முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது
கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை
இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?
‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை
10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!
செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து
{{comments.comment}}