டெல்லி: மெஃப்டால் எனப்படும் வலி நிவாரண மாத்திரையை பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் அதிகம் ஏற்படுவதாக, இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரித்துள்ளது.
மெஃப்டால் என்பது வலி நிவாரணி மாத்திரையாகும். மாதவிடாய் வலி, மூட்டு வலி, தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பயன்படுத்தும் மாத்திரை தான் இது. இம்மாத்திரையை பன்படுத்துவதினால் வலி சீக்கிரம் குறையும். இதனால் மாதவிடாய் வலி, மூட்டு வலி, தலைவலி போன்ற நாட்களில் வலி பொறுக்க முடியாத அளவுக்கு இருக்கும்போது பலரும் இதை உட்கொள்கின்றனர்.
ஆனால் இந்த மாத்திரைகள் அபாயகரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவும், இதை பயன்படுத்தக் கூடாது என்றும் ஐபிசி என்னும் இந்திய மருத்துகளுக்கான தர நிறுவனம் அறிவித்துள்ளது. மருந்து பொருட்களுடன் தொடர்புடைய பாதகமான மருந்து எதிர்வினைகள் மற்றும் பாதகமான நிகழ்வுகள் பற்றிய தகவல்களைக் கண்காணிக்கும் இந்திய பார்மகோவிஜிலன்ஸ் அமைப்பு, தனது முதற்கட்ட ஆய்வில் மெஃப்டால் மருந்து மெஃபெனாமிக் அமிலம் ஈசினோபிலியா மற்றும் அமைப்பு ரீதியான அறிகுறிகளுடன் மருந்து எதிர்வினைகளைத் தூண்டுகிறது என்பதை கண்டறிந்துள்ளது.

இந்த மாத்திரைகளை உட்கொள்வதினால் எதிர் வினைகள் அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக வெள்ளை அணுக்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. மேலும், எரிச்சல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட வாய்ப்புகள் அதிகமாம். மெஃப்டால் மாத்திரைகள் சாப்பிட்ட 2 முதல் 8 வாரங்களுக்கு பின்னர் தான் விளைவுகள் தெரியும். ஆதலால் இந்த மாத்திரைகளை மருத்துவர்கள் அறிவுறுத்தல் இல்லாத காலங்களில் தவிர்க்க வேண்டும் என்று ஐபிசி தெரிவித்துள்ளது.
பொறுமையை சோதிக்கும் கூட்டணிக் கட்சிகள்.. அமைதியாக இருக்கும் திமுக.. என்ன நடக்கும்?
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட்:பிப்ரவரி 12ல் மதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ
தமிழகத்தில் ஆட்சியாளர்களை எதிர்த்து எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது: ஜி.கே.வாசன் பேட்டி
ராமதாஸ் பாமக வந்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்...திருமாவளவன் உறுதி
கிச்சனில் இருக்கும்போது கவனம் தோழியரே.. எண்ணெய் தீ விபத்தை.. தடுப்பது எப்படி?
ஒரு வாரத்துக்கு நகைக் கடை பக்கமே போகாமல் இருந்தால் தங்கம் விலை குறையுமா!?
பிப்ரவரி 17-ல் தமிழக இடைக்கால பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
இந்திய சீனியர் அணிக்கு வைபவ் வர முடியாது.. குறுக்கே நிற்கும் கெளஷிக் (ஐசிசி விதி)!
முகம்து சிராஜுக்கு அடித்த லக்கி பிரைஸ்.. ராணா வெளியேறினார்.. சிராஜுக்கு வாய்ப்பு!
{{comments.comment}}