திருவனந்தபுரம்: இதுவரை வந்த கொரோனாவைரஸ் வேரியன்ட்களை விட தீவிரமாகப் பரவக் கூடிய புதிய வகை கொரோனாவைரஸ் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது. "JN 1" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் இந்தப் புதிய வகை கொரோனாவைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய கொரோனாவைரஸ் வகைகளை விட இது தீவிரமானதாக இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கரகுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனையில் இந்த வைரஸைக் கண்டறிந்துள்ளனர்.

79 வயதான அந்த நபருக்கு இன்ப்ளூயன்ஸா பாதிப்பு ஏற்பட்டால் என்னெல்லாம் அறிகுறிகள் இருக்குமோ அதேபோன்ற அறிகுறிகள் இருந்தன. அவர் தற்போது கொரோனாவிலிருந்து குணமடைந்து விட்டார். இந்த வகை கொரோனாவைரஸ் வகை இன்னும் உலக அளவில் பெரிய அளவில் பரவவில்லை என்ற போதிலும் கூட இதுகுறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
என்னெல்லாம் அறிகுறிகள் தென்படும்?
இந்தியாவின் கடைசி கோவிட் அலையில் பரவிய ஓமைக்ரான் வகையின் ஒரு திரிபாக இந்த JN 1 வகை வைரஸ் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில்தான் இது முதன் முதலில் கடந்த செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டது. அடுத்து சீனாவில் சில நாட்களுக்கு முன்பு இது கண்டறியப்பட்டது. தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வகை வைரஸ் தீவிரமானது என்றாலும் கூட பீதி அடையத் தேவையில்லை என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து இதைக் கண்காணிக்க வேண்டியது அவசியம். வழக்கமான காய்ச்சல், மூக்கடைப்பு, தொண்டை வலி, தலைவலி, வயிற்று உபாதைகள் ஆகியவைதான் இந்த வகை கொரோனா பாதிப்புக்குள்ளானோரிடம் தென்படும் அறிகுறிகள் ஆகும். சிலருக்கு மட்டுமே மூச்சு விடுவதில் பிரச்சினை ஏற்படுகிறது. மற்றபடி உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் நான்கு, ஐந்து நாட்களில் குணமடைந்து விடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}