"JN 1".. கேரளாவில் பரவும் புது கொரோனா.. முந்தைய வேரியன்ட்களை விட தீவிரமானது..!

Dec 17, 2023,12:58 PM IST

திருவனந்தபுரம்: இதுவரை வந்த கொரோனாவைரஸ் வேரியன்ட்களை விட தீவிரமாகப் பரவக் கூடிய புதிய வகை கொரோனாவைரஸ் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது.  "JN 1" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


திருவனந்தபுரம் மாவட்டத்தில் இந்தப் புதிய வகை கொரோனாவைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய கொரோனாவைரஸ் வகைகளை விட இது தீவிரமானதாக இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கரகுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனையில் இந்த வைரஸைக் கண்டறிந்துள்ளனர். 




79 வயதான அந்த நபருக்கு இன்ப்ளூயன்ஸா பாதிப்பு ஏற்பட்டால் என்னெல்லாம் அறிகுறிகள் இருக்குமோ அதேபோன்ற அறிகுறிகள் இருந்தன.  அவர் தற்போது கொரோனாவிலிருந்து குணமடைந்து விட்டார். இந்த வகை கொரோனாவைரஸ் வகை இன்னும் உலக அளவில் பெரிய அளவில் பரவவில்லை என்ற போதிலும் கூட இதுகுறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


என்னெல்லாம் அறிகுறிகள்  தென்படும்?


இந்தியாவின் கடைசி கோவிட் அலையில் பரவிய ஓமைக்ரான் வகையின் ஒரு திரிபாக இந்த JN 1 வகை வைரஸ் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில்தான் இது முதன் முதலில் கடந்த செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டது.  அடுத்து சீனாவில் சில நாட்களுக்கு முன்பு இது கண்டறியப்பட்டது. தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.


இந்த வகை வைரஸ் தீவிரமானது என்றாலும் கூட பீதி அடையத் தேவையில்லை என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து இதைக் கண்காணிக்க வேண்டியது அவசியம்.  வழக்கமான காய்ச்சல், மூக்கடைப்பு, தொண்டை வலி, தலைவலி, வயிற்று உபாதைகள் ஆகியவைதான் இந்த வகை கொரோனா பாதிப்புக்குள்ளானோரிடம் தென்படும் அறிகுறிகள் ஆகும். சிலருக்கு மட்டுமே மூச்சு விடுவதில் பிரச்சினை ஏற்படுகிறது. மற்றபடி உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் நான்கு, ஐந்து நாட்களில் குணமடைந்து விடலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

அதிகம் பார்க்கும் செய்திகள்