விஷால் அரசியலுக்கு வரப் போறதா சொல்றாங்களே.. "ஸாரி அதைக் கேட்காதீங்க".. ரஜினி பளிச் பதில்!

Feb 10, 2024,02:44 PM IST

சென்னை: நடிகர்  விஷால் அரசியலுக்கு வரப் போவதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு SORRY அரசியல் குறித்து கேள்வி கேட்க வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.


நடிகர் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் லால் சலாம் படம் வெளிவந்துள்ளது.  3,  வை ராஜா வை படங்களுக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் லால் சலாம். இந்த படத்தில் மெய்தீன்பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். 


விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ. ஆர்.  ரஹ்மான் இசையமைத்துள்ள லைக்கா சார்பில் சுபாஷ் கரன் படத்தை தயாரித்துள்ளார்.  




இந்த நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள் பேசும்போது, லால் சலாம் படம் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. படத்தை தயாரித்த லைக்கா ப்ரொடக்‌ஷன், இயக்குனர் ஐஸ்வர்யாவுக்கு, பட குழுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.


அடுத்து லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க உள்ளேன்.  வேட்டையன் படப்பிடிப்பு 80 சதவீதம்  நிறைவடைந்துள்ளது.  இன்னும் 20 சதவீதம் மீதம் உள்ளது என்றார் ரஜினிகாந்த்.


அடுத்து செய்தியாளர் ஒருவர், விஜய்யைத் தொடர்ந்து விஷாலும் அரசியலுக்கு வரப் போவதாக சொல்கிறார்களே, முதல்வர் வேட்பாளர்கள் என்று ஆரம்பித்தபோது, ஸாரி, அரசியல் வேண்டாம் என்று பளிச்சென்று  கூறி விட்டு நகர்ந்தார் ரஜினிகாந்த்.


சில நாட்களுக்கு முன்பு விஜய் அரசியலுக்கு வந்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, வாழ்த்துகள் என்று கூறியிருந்தார் ரஜினிகாந்த். இதையடுத்து விஜய்யும், ரஜினிக்கு போன் செய்து நன்றி கூறினார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்