சென்னை: நடிகர் விஷால் அரசியலுக்கு வரப் போவதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு SORRY அரசியல் குறித்து கேள்வி கேட்க வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் லால் சலாம் படம் வெளிவந்துள்ளது. 3, வை ராஜா வை படங்களுக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் லால் சலாம். இந்த படத்தில் மெய்தீன்பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.
விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள லைக்கா சார்பில் சுபாஷ் கரன் படத்தை தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள் பேசும்போது, லால் சலாம் படம் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. படத்தை தயாரித்த லைக்கா ப்ரொடக்ஷன், இயக்குனர் ஐஸ்வர்யாவுக்கு, பட குழுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
அடுத்து லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க உள்ளேன். வேட்டையன் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் 20 சதவீதம் மீதம் உள்ளது என்றார் ரஜினிகாந்த்.
அடுத்து செய்தியாளர் ஒருவர், விஜய்யைத் தொடர்ந்து விஷாலும் அரசியலுக்கு வரப் போவதாக சொல்கிறார்களே, முதல்வர் வேட்பாளர்கள் என்று ஆரம்பித்தபோது, ஸாரி, அரசியல் வேண்டாம் என்று பளிச்சென்று கூறி விட்டு நகர்ந்தார் ரஜினிகாந்த்.
சில நாட்களுக்கு முன்பு விஜய் அரசியலுக்கு வந்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, வாழ்த்துகள் என்று கூறியிருந்தார் ரஜினிகாந்த். இதையடுத்து விஜய்யும், ரஜினிக்கு போன் செய்து நன்றி கூறினார் என்பது நினைவிருக்கலாம்.
நவம்பர் 22ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா?... இதோ முழு விபரம்!
மதுரை - கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை வரும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!
துருப்பிடித்துப் போய்விட்ட திமுக ஆட்சிக்கு நேற்று நடந்த குற்றங்களே சாட்சி: நயினார் நாகேந்திரன்
கொரியன்களுக்கு ஏன் தொப்பை இல்லை தெரியுமா.. கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்!
சபரிமலையில் குவியும் ஐயப்ப பக்தர்கள்.. தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் வருகை!
மதுரை, கோவை மெட்ரோ திட்டம் வராதா.. கவலையில் மக்கள்.. கேள்விக் கனை தொடுக்கும் எம்.பிக்கள்
மீண்டும் பீகார் முதல்வராகிறார் நிதீஷ் குமார்.. இன்று தேஜகூ சட்டமன்ற தலைவராக தேர்வாகிறார்
TET தேர்வு.. சோசியல் சயின்ஸுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை.. முரண்களைக் களையுங்களேன்!
{{comments.comment}}