சங்கத் தமிழ் இலக்கியப் பூங்காவின் திருப்பூர் திருவிழா.. முனைவர் கோ. லதாவுக்கு கெளரவம்

May 27, 2026,03:48 PM IST

சங்கத்தமிழ் இலக்கியப் பூங்கா மற்றும் நூல்கள் பதிப்பகம் அகிலம் இணைந்து நடத்திய முத்தமிழ் போற்றிய நால்வர் பற்றிய கருத்தரங்கம், கவியரங்கம், கதையரங்கம், இசை அரங்கம் மற்றும் சீர்மிகு ஆசிரியர் விருது வழங்கும் நிகழ்வானது திருப்பூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த மாணிக்கவாசகர் தமிழ் மண்டபத்தில் நடைபெற்றது. 


இதில் பாரத் சேவா ரத்னா. முனைவர். கோ. லதா, கல்வித் தூதர், மரபுப் பாவலர்,எழுத்தாளர், தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருதாளர், சென்னை அவர்கள் மாணவர்கள் கல்வி மேம்பாட்டு நலனுக்காக பாராட்டிய சீர்மிகு திறமைகளை பாராட்டும் விதமாக சங்கத்தமிழ் இலக்கியப் பூங்கா நிறுவனர் கவிஞர் நீலகண்டத் தமிழன் நல்லாசிரியரை நேர்காணல் மூலமாக நேர்காணல் நேரடி காணொளி பதிவு செய்தார்.




அதேபோல நூலை பதிவிட்டும் சீர்மிகு ஆசிரியர் என்று புத்தகத்தில் ஆசிரியருடைய வாழ்க்கை குறிப்பை அனைவரும் அறிய நூலாக்கம் செய்தும்  கட்டுரையை தொகுத்தும் நூலில் பதிப்பித்தும் வெளியிட்டு சீர்மிகு ஆசிரியர் விருது 2026 விருதுச் சான்றிதழ் மற்றும் விருதுக் கேடயம் சீர்மிகு ஆசிரியர் நூல் வழங்கியும் முத்தமிழ் போற்றிய நால்வர்களான அப்பர்,சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் பற்றிய கவி அரங்கில் கவிதையும் வாழ்த்துரையும் வழங்கியதைப் பாராட்டி திருவருட்செல்வர் விருதுச் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 


கல்வி அலுவலர்கள் பலரும் நல்லாசிரியர். முனைவர்.கோ. லதா, அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா,  கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர்,  சென்னை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்