மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்... பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

Jan 29, 2026,05:59 PM IST

சென்னை: தமிழகத்தில் பெருகி வரும் குற்றச் சம்பவங்களுக்கு மதுவே முக்கியக் காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இனியாவது அரசு மதுக்கடைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பீகாரைச் சேர்ந்த தொழிலாளி, அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய ராமதாஸ், இந்த கோரமான கொலைக்கு மதுவே அடிப்படை காரணம் என்று தெரிவித்துள்ளார். "வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு" என்பது ஏட்டளவில் மட்டுமே இருப்பதாகத் தோன்றும் வகையில் இத்தகைய வன்முறைகள் நிகழ்வது வேதனைக்குரியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.




அரசு தனது நலத்திட்டங்களைச் செயல்படுத்தவும், இலவசங்களை வழங்கவும் மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மது வருவாயைத் தவிர்த்து, மற்ற வழிகளில் வருமானம் ஈட்டப் பல மாற்று வழிகள் உள்ளன.மதுக்கடைகளை மூடுவதன் மூலம் மக்களின் வாழ்வாதாரமும், சமூகப் பாதுகாப்பும் மேம்படும். தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, மக்களின் நலன் கருதி மதுக்கடைகளை நிரந்தரமாக மூடுவதற்கான கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என்று அவர் அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார். 


பீகார் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டு, மூட்டையில் கட்டி அடையாறு ஆற்றில் சடலமாக வீசப்பட்ட சம்பவம் தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள நிலையில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சமயத்தில் ராமதாஸ் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை பலரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!

news

Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!

news

அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!

news

கண்ணும் கண்ணும் நோக்கினால்!

news

அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?

news

ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

அதிகம் பார்க்கும் செய்திகள்