சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்பட்டாலும்,ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பனியின் தாக்கம் குறைந்து வெயில் அதிகரித்து வருகிறது. பனிக்காலம் முழுமையாக நிறைவடையாமல் இப்பொழுதே வெயில் அதிகரித்து வரும் நிலையில் இனி கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்குமோ என மக்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் தற்போது தென் மாவட்ட பகுதிகளில் வெயில் அதிகரித்து காணப்படுகிறது. அதே சமயம் வட தமிழ்நாடு பகுதிகளில் ஒரு சில இடங்களில் கடுமையான பனிமூட்டமும் நிலவி வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் வெயில் நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். அதே சமயத்தில் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
இதனைத் தொடர்ந்து 7.2.2025 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
8.2.25 முதல் 11.2.25 வரை தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும் என அறிவித்துள்ளது.
அதேபோல் சென்னையை பொறுத்தவரை இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்சமாக 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்சமாக 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக் கூடும் என அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கரூர் துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு, வதந்திகளை பரப்ப வேண்டாம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
கரூர் துயர சம்பவம்... ஹேமமாலினி தலைமையில்... தேஜ கூட்டணியில் 8 பேர் கொண்ட குழு அமைப்பு
கரூர் கூட்ட நெரிசல்.. குற்றஞ்சாட்டப்பட்டவர்களே விசாரிக்கக்கூடாது.. சிபிஐ விசாரணை வேண்டும்: அன்புமணி
கரூரில் பாதிக்கப்பட்டோரை பார்க்க செல்கிறாரா விஜய்?... பாதுகாப்பு வழங்கக் கோரி மனு
டாக்டர் ராமதாஸை தைலாபுரம் சென்று சந்தித்த சி வி சண்முகம்.. அதிமுக கூட்டணியில் இணைவாரா?
கரூர் சம்பவத்திற்குப் பின்.. விஜய்யுடன் பேசிய முதல் தலைவர்.. ராகுல் காந்தி திடீர் பேச்சு ஏன்?
கரூர் கூட்ட நெரிசல் துயரம்.. கவலைப்படாதீங்க விஜய்.. போன் செய்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி
யாரைக் குறை கூறுவது...?? யார் மீது குற்றம் சாட்டுவது..?? மக்களுக்கு ஏன் இந்த சினிமா மயக்கம் ..??
{{comments.comment}}