பிரித்து எடுத்த பேய் மழை.. திக்கித் திணறிய யுஏஇ... விமானங்கள் ரத்து, பள்ளி கல்லூரிகள் மூடல்

May 03, 2024,06:08 PM IST

துபாய்:  மீண்டும் ஒரு பேய் மழையை துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் சந்தித்துள்ளன. இதன் காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.


நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணி புரிய உத்தரவிட்டுள்ளன. பூங்காக்கள், கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




சில வாரங்களுக்கு முன்புதான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பேய் மழை பெய்து  மக்களை ஸ்தம்பிக்க வைத்தது. பலர் அதில் உயிரிழந்தனர். நகரங்கள் பலவற்றிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடிய காட்சிகளை மறந்திருக்க முடியாது. இந்த நிலையில் நேற்று மீண்டும் பேய் மழை திரும்ப வந்தது. நேற்றும் இன்றும் புரட்டிப் போட்ட பெரு மழையால் பல ஊர்கள் வெள்ளக்காடாகியுள்ளன. பல விமானங்கள் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.


துபாயில் மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஒர்க் பிரம் ஹோம் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.  கடற்கரைகள், பூங்காக்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்தியாவைச் சேர்ந்த இன்டிகோ நிறுவனம் துபாய், ஷார்ஜா, ரஸ் அல் கைமா, அபுதாபிக்கு இயக்கி வரும் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  வருகை, புறப்பாடு ஆகியவற்றில் தாமதம் மற்றும் சிக்கல் நிலவுவதாக அது தெரிவித்துள்ளது.


கடந்த மாதம்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பேய் மழை பெய்தது. 1949ம் ஆண்டுக்குப் பிறகு பெய்த மிகப் பெரிய மழையாக இது பதிவானது. இதனால் பல ஊர்கள் வெள்ளத்தில் சிக்கி மிதந்தன. கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றதைப் பார்த்து உலகமே அதிர்ந்தது. துபாய் விமான நிலையமே வெள்ளத்தில் சிக்கி மூழ்கியதையும் மக்கள் பார்த்து அதிர்ச்சியுற்றனர் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்