பிரித்து எடுத்த பேய் மழை.. திக்கித் திணறிய யுஏஇ... விமானங்கள் ரத்து, பள்ளி கல்லூரிகள் மூடல்

May 03, 2024,06:08 PM IST

துபாய்:  மீண்டும் ஒரு பேய் மழையை துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் சந்தித்துள்ளன. இதன் காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.


நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணி புரிய உத்தரவிட்டுள்ளன. பூங்காக்கள், கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




சில வாரங்களுக்கு முன்புதான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பேய் மழை பெய்து  மக்களை ஸ்தம்பிக்க வைத்தது. பலர் அதில் உயிரிழந்தனர். நகரங்கள் பலவற்றிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடிய காட்சிகளை மறந்திருக்க முடியாது. இந்த நிலையில் நேற்று மீண்டும் பேய் மழை திரும்ப வந்தது. நேற்றும் இன்றும் புரட்டிப் போட்ட பெரு மழையால் பல ஊர்கள் வெள்ளக்காடாகியுள்ளன. பல விமானங்கள் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.


துபாயில் மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஒர்க் பிரம் ஹோம் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.  கடற்கரைகள், பூங்காக்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்தியாவைச் சேர்ந்த இன்டிகோ நிறுவனம் துபாய், ஷார்ஜா, ரஸ் அல் கைமா, அபுதாபிக்கு இயக்கி வரும் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  வருகை, புறப்பாடு ஆகியவற்றில் தாமதம் மற்றும் சிக்கல் நிலவுவதாக அது தெரிவித்துள்ளது.


கடந்த மாதம்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பேய் மழை பெய்தது. 1949ம் ஆண்டுக்குப் பிறகு பெய்த மிகப் பெரிய மழையாக இது பதிவானது. இதனால் பல ஊர்கள் வெள்ளத்தில் சிக்கி மிதந்தன. கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றதைப் பார்த்து உலகமே அதிர்ந்தது. துபாய் விமான நிலையமே வெள்ளத்தில் சிக்கி மூழ்கியதையும் மக்கள் பார்த்து அதிர்ச்சியுற்றனர் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்