தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்.. விஜய் சொன்ன ஹேப்பி நியூஸ்!

Sep 08, 2024,06:05 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிவு செய்யப்பட்ட கட்சியாக தேர்தலில் பங்கேற்க அனுமதி அளித்துள்ளதாக கட்சித் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.


நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் செய்துள்ளார். புதிய கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கியுள்ளார். கட்சி தொடர்பான பணிகள் ஒரு பக்கம் வேகமாக நடந்து வருகிறது. முதலில் கொடியை சமீபத்தில் அறிமுகப்படுத்தினார்கள். அடுத்து மாநில மாநாடு நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாட்டை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 


இந்த மாநாட்டுக்கான அனுமதி கோரி விழுப்புரம் மாவட்ட எஸ்பியிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக 21 கேள்விகளை காவல்துறை கேட்டிருந்தது. அந்தக் கேளவிகளுக்குரிய பதில்களை தவெகவும் அளித்து விட்டது. இந்த நிலையில் நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.




இந்த நிலையில், தற்போது விஜய்யிடமிருந்து ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற அடிப்படை கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவித கொள்கை கொண்டாட்டமே. எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும் அரசியல் கட்சிக்கான சட்டபூர்வமான பதிவுக்காகவுமே நாம் இதுவரை காத்திருந்தோம். இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது.


தமிழக வெற்றி கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அதை சட்டபூர்வமாக பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம் தற்போது நம் தமிழக வெற்றிக்கழகத்தை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்து தேர்தல் அரசியலில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக பங்கு பெற அனுமதி வழங்கி உள்ளது. இதை உங்களோடு பகிர்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.


திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக இப்போது முதல் கதவு நமக்காக திறந்து இருக்கிறது. இச்சூழலில் நமது கழகத்தின் கொள்கை பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள்.


தடைகளை தகர்த்தெறிந்து கொடி உயர்த்தி கொள்கை தீபம் எது தமிழக மக்களுக்கான தலையாய அரசியல் கட்சியாக தமிழ்நாட்டில் வலம் வருவோம் என்று விஜய் தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போராட்டங்கள் பல.. இறுதியில் அழகான வெற்றி.. After the Struggle, I Shine !

news

ஆயிரம் முகங்களை கடந்த பயணத்தில்.. Express the emotion getting someone

news

ஒரு பேனாவின் முனுமுனுப்பு.. The Whisper of the PEN

news

போராட்டத்தில் திடீர் பரபரப்பு... மயங்கி விழுந்த ஆசிரியை... பதற்றத்தில் போராட்டக் களம்!

news

அரசியல் பேசத் தடை...நாளை ஜனநாயகன் ஆடியோ விழாவில் விஜய் என்ன பேசுவார்?

news

அம்மா உணவகம் போல... டெல்லியில் அடல் உணவகம்... 5 ரூபாய்க்கு இரண்டு வேளை சாப்பாடு!

news

ஒரே அரிசி, பலவகை கஞ்சி.. காய்ச்சல் இருந்தால் இதை சாப்பிட்டுப் பாருங்க!

news

டிசம்பர் 26 என்ன தினம் என்று நினைவில் வருகிறதா?

news

கள்ளக்குறிச்சியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை

அதிகம் பார்க்கும் செய்திகள்