தெலங்கானாவில் காங்கிரஸ் clear leading.. சத்திஸ்கர், ம.பி, ராஜஸ்தானில் இழுபறி

Dec 03, 2023,09:36 AM IST
டெல்லி: தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை தட்டிப் பறிக்கிறது. தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சி தனது ஆட்சியைப்  பறி கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் மாநிலங்களில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிஸோரம் மற்றும் சத்திஸ்கர் மாநில சட்டசபைகளுக்கு பல கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் மிஸோரம் மாநிலத்தைத் தவிர மற்ற நான்கு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. மிஸோரம் மாநிலத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து மக்கள் பதிவு செய்த வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  முதல் கட்ட நிலவரப்படி தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய அளவில் முன்னிலையில் இருந்து வருகிறது. அங்கு தற்போது ஆட்சியில் உள்ள பிஆர்எஸ் கட்சி 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. 3வது இடத்தில் பாஜக இருக்கிறது.  இங்கு காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் நிலை உருவாகியுள்ளது. தெலங்கானா மாநிலம் உருவான பிறகு நடந்த 3 தேர்தல்களில் 2 முறை பிஆர்எஸ் கட்சியே வெற்றி பெற்றது. தற்போது நடந்துள்ள 3வது தேர்தலில் காங்கிரஸ் வெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.





சத்திஸ்கரில் தற்போது காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது.  இங்கு ஆரம்பத்தில் காங்கிரஸ் நல்ல முன்னிலை பெற்றிருந்தது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்துள்ளது. பாஜக முன்னிலைக்கு மாறியுள்ளது. 

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானிலும் தற்போது இழுபறியே நிலவி வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் சற்று பாஜகவின் கை ஓங்கியுள்ளது. ராஜஸ்தானில் இரு கட்சிகளுக்கும் இடையே பத்து தொகுதிகள் வித்தியாசம் உள்ளது. போகப் போகத்தான் யார் எந்த மாநிலத்தில் ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்பது தெளிவாக தெரிய வரும்.


சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்