பாரமுல்லா.. உமர் அப்துல்லாவை மண்ணைக் கவ்வ வைத்து.. செம வெற்றி.. யார் இந்த என்ஜீனியர் ரஷீத்?

Jun 06, 2024,05:33 PM IST

டெல்லி:  மருத்துவமனையில்  படுத்த படுக்கையாக இருந்த பல தலைவர்கள் தேர்தல் களத்துக்கு வராமலேயே ஜெயித்தது பழைய வரலாறு. இப்போது புதிய வரலாறு ஒன்று படைக்கப்பட்டுள்ளது. அது, இரண்டு கைதிகள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பிரச்சாரத்துக்கே வராத நிலையில் போட்டியிட்டு வெற்றியும் பெற்று அசத்தியுள்ளனர்.


இவர்களில் ஒருவர் அம்ரித்பால் சிங். இவர் பஞ்சாப் மாநிலம் கதூர் சாஹிப் தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார். இவர் தீவிரவாத போக்குடைய சீக்கிய தலைவர் என்று வர்ணிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர். அதேபோல இன்னொருவர் ஷேக் அப்துல் ரஷீத். தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்ததாக கூறி இவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவருக்கு என்ஜீனியர் ரஷீத் என்றும் ஒரு பெயர் உண்டு. இவர் ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்.


இந்த இருவரும் வெற்றி பெற்றதால் சட்டக் குழப்பங்களும் ஏற்பட்டுள்ளன. இவர்களால் எப்படி எம்.பிக்களாக செயல்படும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருவரும் எம்.பிக்களாக பதவியேற்பதில் சட்ட ரீதியாக எந்தப் பிரச்சினையும் இல்லையாம். ஆனால் இருவரும் வெளியில் வந்து மக்கள் பணியாற்ற முடியாது.


என்ஜீனியர் ரஷீத்




இவர்களில் என்ஜீனியர் ரஷீத், 20219ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி கைது செய்யப்பட்டு அப்போது முதல் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட ஒரு பாஜக ஆட்சி முழுவதும் சிறைவாசம் அனுபவித்துள்ள அவர் அடுத்த பாஜக ஆட்சிக்கு வரும்போது எம்.பியாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


என்ஜீனியர் ரஷீத், ஜம்மு காஷ்மீர் அவாமி இத்திஹாத் என்ற கட்சியை நிறுவியவர். 2 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். காஷ்மீரிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். பாரமுல்லா தொகுதியில் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டார்.  இதில் யாரும் எதிர்பாராத வகையில் உமர் அப்துல்லாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றுள்ளார் ரஷீத்.


ஆரம்பத்தில்  என்ஜீனியராக இருந்தவர் ரஷீத். இதனால்தான் அவரது பெயர் என்ஜீனியர் ரஷீத் என்றும் கூப்பிடப்படுகிறது. பின்னர் மக்களுக்காக அரசியலுக்கு வந்தார். மக்களோடு மக்களாக இருந்தவர். யுஏபிஏ சட்டத்தால் கைது செய்யப்பட்ட முதல்  அரசியல் தலைவர் என்ற பெயர் ரஷீத்துக்கு உண்டு. லோக்சபா தேர்தலில் ரஷீத்துக்காக அவரது இரண்டு மகன்கள்தான் தீவிரப் பிரச்சாரம் செய்தனர். தொடர்ந்து மக்களை சந்தித்தும், ஏராளமான கூட்டங்களை நடத்தியும் ரஷீத்துக்கு ஆதரவு திரட்டினர். பாரமுல்லா தொகுதியிலும் ரஷீத்துக்கே மக்கள் ஆதரவு இருந்ததால் தற்போது அவர் வென்றுள்ளார்.


இரு தலைவர்களும் தற்போது நீதிமன்ற அனுமதியுடன் நாடாளுமன்றம் சென்று எம்.பிக்களாக பதவி ஏற்க வேண்டும். அதன் பிறகு என்ன மாதிரியான சட்ட நடைமுறைகள் உள்ளதோ அதற்கேற்ப இவர்கள் எம்.பி பதவியில் தொடர்வது தீர்மானிக்கப்படும்.


அம்ரித் பால் சிங்




மறுபக்கம், அம்ரித் பால் சிங் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். தற்போது அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். 


சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் அம்ரித் பால் சிங். காங்கிரஸ் வேட்பாளர் குல்பீர் சிங் ஜிராவை அவர் கிட்டத்தட்ட 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். சிறையிலிருந்தபடி வெற்றி பெற்றுள்ள அம்ர்தி பால் சிங்கை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவரது வக்கீல் கூறியுள்ளார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், அம்ரித் பால் சிங்கை விடுவிக்க வேண்டும். இதைத் தவிர அரசுகளுக்கு வேறு வழியில்லை. பஞ்சாப் ஆம் ஆத்மி அரசும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் இதைச் செய்ய வேண்டும். மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

news

Diwali 2024: டமால் டுமீல்.. தீபாவளிக்கு வரிசை கட்டும்.. புது வரவு பட்டாசுகள்.. என்னென்ன வந்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்