சென்னை: மறைந்த பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு இசை அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு சாதனை இசை நிகழ்ச்சி சென்னையில் நாளை நடைபெறவுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பீனிக்ஸ் க்ரூ கிளப் அமைப்பின் சார்பில் சென்னையில் நாளை ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்காக ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 240 பாடகர்கள் கலந்து கொண்டு 120 எஸ்பிபி டூயட் பாடல்களை, 12 மணி நேரம் இடை விடாமல் பாடவுள்ளனர். இந்த நிகழ்ச்சி புக் ஆப் ஆசியா ரெக்கார்ட்ஸில் இடம் பெறவுள்ளது.
நிகழ்ச்சியில் தலைமை விருந்தினர்களாக கவிஞர் முத்துலிங்கம், இசையமைப்பாளர் பாலபாரதி, நடிகை நளினி, பின்னணிப் பாடகி நிர்மலா நரசிம்மன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
சென்னை தி.நகர் ஜிஎன் செட்டி சாலையில் உள்ள சர் பிட்டி தியாகராயா ஆடிட்டோரியத்தில் செப்டம்பர் 23ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணிக்கு நிகழ்ச்சி முடிவடையும்.
விழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பீனிக்ஸ் க்ரூ கிளப் நிறுவனர் கோமதி ஞானம் மற்றும் இணை நிறுவனர் டி. ரமேஷ் ஆகியோர் அழைத்துள்ளனர்.
Aadi Pooram: ஆண்டாளையும், அம்பாளையும் வழிபாடு செய்ய உகந்த நாள்.. ஆடிப்பூரம்!
திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
{{comments.comment}}