"சார் ஒரு செல்பி"..  இதுதான்  கண்டிஷன்.. ஓ.கே.சொன்ன பெண்.. கலகலக்க வைத்த அமைச்சர்!

Feb 14, 2023,11:02 AM IST

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது செல்பி எடுக்க வந்த பெண்ணிடம், கை சின்னத்துக்கு ஓட்டுப் போட்டால் போட்டோ எடுக்கலாம் என்று கூறி அமைச்சர் சி.வி. கணேசன் கலகலக்க வைத்தார்.


ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈவிகேஎஸ். இளங்கோவனை ஆதரித்து, காங்கிரஸ் கட்சியினரை விட திமுகவினர்தான் மிகத் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். மறுபக்கம் இரட்டை இலை களத்தில் நிற்பதால் திமுகவினர் மிக மிக உஷாராக உள்ளனர்.


எந்த ஒரு வகையிலும் பின்னடைவு வந்து விடக் கூடாது என்பதில் திமுக தரப்பு கவனமாக உள்ளது. இதனால் அமைச்சர்கள் படையே பிரசாரத்தில் குதித்துள்ளது. மூத்த அமைச்சர்கள் முதல் இளையவர்கள் வரை அத்தனை பேரும் இறங்கி வேலை பார்த்துக் கொண்டுள்ளனர். 


இந்த நிலையில் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனும் தனது குழுவினரோடு தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார்.  திருநகர் 24 வது வார்டு , கிருஷ்ணப்பாளையம்காலனி உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் பிரசாரம் செய்தார்.  வரிசையாக ஒவ்வொருவரிடமும் வாக்கு கேட்டு வந்த அமைச்சர் கணேசன், ஒரு டீக்கடையைப் பார்த்ததும் சட்டென்று உள்ளே புகுந்தார்.


பாட்டு பாடி ஓட்டு கேட்கும் சீமான்...ட்விட்டரில் தாறுமாறாக டிரெண்டாகும் வீடியோ


டீ மாஸ்டரிடம் நான் ஒரு டீ போட்டுத் தர்றேன் என்று கூறி டீ போட ஆரம்பித்தார். சும்மா சொல்லக் கூடாது.. சூப்பராகவே போட்டார். பின்னர் அந்த டீயை அனைவருக்கும் கொடுத்தனர். அதன் பின்னர் அங்கிருந்தோரிடம் மறக்காம எல்லோரும் கை சின்னத்துக்கு ஓட்டுப் போட்டுடுங்க என்று கூறி விட்டு விடை பெற்றார் கணேசன்.


பின்னர் அவரது பிரசாரத்தின்போது ஒரு பெண் அவரிடம் வந்து சார் உங்களுடன் ஒரு செல்பி எடுக்க வேண்டும் என்று கேட்கவே, தாராளமாக எடுத்துக்குங்க.. ஆனால் கை சின்னத்துக்குத்தான் ஓட்டுப் போடணும் என்று கூறி சந்தடி சாக்கில் ஒரு ஓட்டை கன்பர்ம் செய்து விட்டார் அமைச்சர். அதன் பின்னர் அப்பெண்ணுடன் ஒரு செல்பியும் எடுத்துக் கொண்டார்.


சமீபத்திய செய்திகள்

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

news

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்