இடைத் தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில்.. பிப்ரவரி 5 பொது விடுமுறை அறிவிப்பு

Jan 21, 2025,07:07 PM IST

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று ஈரோடு மாவட்டத்திற்கு பொது விடுமுறை அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.


ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம் எல் ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி உடல் நலக்குறைவால் மறைந்ததையடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி 10ஆம் தேதி தொடங்கப்பட்டு 17ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. இதில் மொத்தம் 58 பேர் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு, வேப்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.




இதன்பிறகு 55 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக இருந்தது.நேற்று  வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் என்பதால், சுயேட்சை வேட்பாளர்கள் 8 பேர் வாபஸ் பெற்றனர்.  பத்மாவதி என்ற பெண் வேட்பாளரின் பெயர் கர்நாடக மாநில வாக்காளர் பட்டியலில் இருப்பதால் அவரது மனுவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை இரு சுயேச்சை வேட்பாளர்கள் வைத்தனர். இதையடுத்து நேற்று நள்ளிரவில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.


இறுதியாக திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 47 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். பாஜக, அதிமுக, தேமுதிக , தவெக, உள்ளிட்ட கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலை புறக்கணித்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.


இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தல் அன்று அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும்  பொது விடுமுறை அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

RIP S Janaki: நான் போன பின்னும் நீ வாழ வேண்டும்.. பாட்டுக்குயில் ஜானகி அம்மா!

news

மறைந்தார் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி.. 3 தலைமுறையாக ரசிகர்களை மகிழ வைத்த வானம்பாடி!

news

Vietnam boat tragedy: வியட்நாட் துயரத்தில் 10 தமிழர்கள் பலி.. முதல்வர் சி. ஜோசப் விஜய் வேதனை

news

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.. உங்களிடம் கேட்கப்படவுள்ள 33 கேள்விகள்!

news

அண்ணாமலையின்'We The Leaders' பொள்ளாச்சியில் நாளை முதல் மாநாடு

news

வாரிசுகளுக்கு அரசு வேலை வேண்டும் : பாமக அன்புமணி வலியுறுத்தல்

news

Jananayagan release update விரைவில் ஜனநாயகன் ரிலீஸ்...போஸ்டருடன் வந்த புதிய அப்டேட்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு திருவிழா 2026 நாளை துவக்கம்

news

இந்தியாவில் OTT தளங்களுக்கும் சென்சார் சான்று: மத்திய அரசு திட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்