ஈரோடு கிழக்கு ஓபிஎஸ் வேட்பாளர் செந்தில்முருகன் எடப்பாடி அணிக்குத் தாவினார்!

Mar 09, 2023,02:15 PM IST

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத் தேர்தலில் ஓ.பி.எஸ். அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில்முருகன் தடாலடியாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்துள்ளார்.


ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு சமீபத்தில் இடைத் தேர்தல் நடைபெற்றது.  இதில் ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிக்கப்பட்டார். அவர் ஓபிஎஸ் அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்தவர். மறுபக்கம் அதிமுக சார்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.


இப்படி ஆளுக்கு ஒரு வேட்பாளரை எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் அறிவித்ததால் இரட்டை இலை சின்னம் முடங்கும் வாய்ப்பு உருவானது. இதையடுத்து பாஜக உள்ளே புகுந்து பஞ்சாயத்து பேசியது. எடப்பாடி பழனிச்சாமி இறங்கி வரவில்லை. ஆனால் ஓபிஎஸ் இறங்கி வந்தார். தனது வேட்பாளர் வாபஸ் பெறுவார் என்று தெரிவித்தார். இதையடுத்து அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிட்டு தோல்வியுற்றார். டெபாசிட் மட்டுமே அவருக்கு மிஞ்சியது.


இந்த நிலையில் செந்தில்முருகன் திடீரென எடப்பாடி பழனிச்சாமி அணிக்குத் தாவியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர் செல்வம், செந்தில் முருகனை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!

news

Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!

news

அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!

news

கண்ணும் கண்ணும் நோக்கினால்!

news

அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?

news

ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

அதிகம் பார்க்கும் செய்திகள்