சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத் தேர்தலில் ஓ.பி.எஸ். அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில்முருகன் தடாலடியாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு சமீபத்தில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிக்கப்பட்டார். அவர் ஓபிஎஸ் அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்தவர். மறுபக்கம் அதிமுக சார்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இப்படி ஆளுக்கு ஒரு வேட்பாளரை எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் அறிவித்ததால் இரட்டை இலை சின்னம் முடங்கும் வாய்ப்பு உருவானது. இதையடுத்து பாஜக உள்ளே புகுந்து பஞ்சாயத்து பேசியது. எடப்பாடி பழனிச்சாமி இறங்கி வரவில்லை. ஆனால் ஓபிஎஸ் இறங்கி வந்தார். தனது வேட்பாளர் வாபஸ் பெறுவார் என்று தெரிவித்தார். இதையடுத்து அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிட்டு தோல்வியுற்றார். டெபாசிட் மட்டுமே அவருக்கு மிஞ்சியது.
இந்த நிலையில் செந்தில்முருகன் திடீரென எடப்பாடி பழனிச்சாமி அணிக்குத் தாவியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர் செல்வம், செந்தில் முருகனை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
{{comments.comment}}