- ஸ்வர்ணலட்சுமி
மாலை நேரம் வந்தாலே வாயெல்லாம் நமநமங்கும். ஏதாவது மொறுமொறுன்னு சாப்பிட்டா சூப்பரா இருக்கும்ல என்று தோன்றும். அதுவும் சுடச் சுட எண்ணெயில் பொறித்தெடுத்த வடை சாப்பிடத்தான் பலருக்கும் வாய் கேட்கும். ஆனால் அதெல்லாம் விடுங்க.. அதை விட சூப்பரான சத்தான ஒரு ஸ்நாக்ஸ் இருக்கு. வாங்க பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

பிரட் - ஆறு ஸ்லைஸ்
சிறிய கொண்டைக்கடலை - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று கட் செய்து கொள்ளவும்
கேரட் - இரண்டு துருவிக் கொள்ளவும்
சோம்பு - அரை ஸ்பூன்
கடலை எண்ணெய் - இரண்டு ஸ்பூன்
மல்லித்தழை - ஒரு கைப்பிடி
கரம் மசாலா - ஒரு ஸ்பூன்
உப்பு காரம் - தேவைக்கு ஏற்ப
செய்முறை
1. பிரட் ஸ்லைஸ் ஒவ்வொன்றாக தோசை கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி லேசாக ப்ரை செய்து கொள்ளவும்.
2. ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சோம்பு சோம்பு போடவும் பிறகு கட் செய்த பெரிய வெங்காயம் நன்றாக வதக்கவும்.
3. சிறிய கொண்டை கடலை 6 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் மூன்று விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும் அதில் சிறிது பெருங்காயம் உப்பு போடவும்.
4. வெங்காயம் வதக்கிய கடாயில் இந்த வேக வைத்த கொண்டைக்கடலை போடவும் பிறகு கரம் மசாலா சேர்க்கவும்.
5.நன்றாக வதங்கியதும் துருவிய கேரட் சேர்க்கவும்
6. உப்பு தேவைக்கு ஏற்ப
7. பிறகு பிரட் கட் செய்து கொள்ளவும்
8. கட் செய்த பிரட் அந்த கடாயில் சேர்க்கவும்
9. அடுப்பை அணைத்துவிட்டு மல்லி தழை சேர்க்கவும்
10. அருமையான சுவையான சத்தான சூடான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெடி
11. குழந்தைகளுக்கு ஒரு தடவை செய்து கொடுங்கள் மீண்டும் மீண்டும் கேட்பார்கள்
நல்லா ஃபில்லிங் ஆன உணவு. குழந்தைகளும் பெரியவர்களும் மாலை நேர டீ யுடன் சாப்பிட அருமையான ஸ்னாக்ஸ்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வானிலை கொடுத்த அப்டேட்.. இன்றும், நாளையும் எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும் தெரியுமா?
மதுரையின் வளர்ச்சிக்கு போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெரிவோம்:முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு!
அரசியல் கட்சிகளுக்கான SOP ரெடி.. உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது தமிழ்நாடு அரசு!
திமுக அரசு ₹4,000 கோடியில் ஊழல் செய்வதற்கு மட்டுமே, விதிகளை மீறி கால நீட்டிப்பு செய்கிறது: அண்ணாமலை
பாஜக அரசின் ஒரவஞ்சனப்போக்கை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்: செல்வப்பெருந்தகை!
17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகள்
மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகம் செய்கிறது திமுக அரசு –அன்புமணி ராமதாஸ் வேதனை
சமூக வலைதளங்களில் இளையராஜா படத்தை பயன்படுத்த தடை: சென்னை உயர்நீதி மன்றம்
மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை!
{{comments.comment}}