- ஸ்வர்ணலட்சுமி
மாலை நேரம் வந்தாலே வாயெல்லாம் நமநமங்கும். ஏதாவது மொறுமொறுன்னு சாப்பிட்டா சூப்பரா இருக்கும்ல என்று தோன்றும். அதுவும் சுடச் சுட எண்ணெயில் பொறித்தெடுத்த வடை சாப்பிடத்தான் பலருக்கும் வாய் கேட்கும். ஆனால் அதெல்லாம் விடுங்க.. அதை விட சூப்பரான சத்தான ஒரு ஸ்நாக்ஸ் இருக்கு. வாங்க பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

பிரட் - ஆறு ஸ்லைஸ்
சிறிய கொண்டைக்கடலை - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று கட் செய்து கொள்ளவும்
கேரட் - இரண்டு துருவிக் கொள்ளவும்
சோம்பு - அரை ஸ்பூன்
கடலை எண்ணெய் - இரண்டு ஸ்பூன்
மல்லித்தழை - ஒரு கைப்பிடி
கரம் மசாலா - ஒரு ஸ்பூன்
உப்பு காரம் - தேவைக்கு ஏற்ப
செய்முறை
1. பிரட் ஸ்லைஸ் ஒவ்வொன்றாக தோசை கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி லேசாக ப்ரை செய்து கொள்ளவும்.
2. ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சோம்பு சோம்பு போடவும் பிறகு கட் செய்த பெரிய வெங்காயம் நன்றாக வதக்கவும்.
3. சிறிய கொண்டை கடலை 6 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் மூன்று விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும் அதில் சிறிது பெருங்காயம் உப்பு போடவும்.
4. வெங்காயம் வதக்கிய கடாயில் இந்த வேக வைத்த கொண்டைக்கடலை போடவும் பிறகு கரம் மசாலா சேர்க்கவும்.
5.நன்றாக வதங்கியதும் துருவிய கேரட் சேர்க்கவும்
6. உப்பு தேவைக்கு ஏற்ப
7. பிறகு பிரட் கட் செய்து கொள்ளவும்
8. கட் செய்த பிரட் அந்த கடாயில் சேர்க்கவும்
9. அடுப்பை அணைத்துவிட்டு மல்லி தழை சேர்க்கவும்
10. அருமையான சுவையான சத்தான சூடான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெடி
11. குழந்தைகளுக்கு ஒரு தடவை செய்து கொடுங்கள் மீண்டும் மீண்டும் கேட்பார்கள்
நல்லா ஃபில்லிங் ஆன உணவு. குழந்தைகளும் பெரியவர்களும் மாலை நேர டீ யுடன் சாப்பிட அருமையான ஸ்னாக்ஸ்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை
தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை
இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்
Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!
கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?
சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!
Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!
இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is
{{comments.comment}}