சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதிலும் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், மிச்சாங் புயல் எதிரொலியாக இந்திய பெருக்கடலிலும், அதை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்கக் கடலிலும், இலங்கையை ஒட்டிய கடல் பகுதியிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தென் தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமானது வரையிலசன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
May 1: காலத்தின் நெற்றியில் நீ இடும் கையெழுத்து.. காய்ந்த உன் கரங்களின் வியர்வை முத்து!
ரவிவர்மன் எழுதாத கலையோ.. மறக்க முடியாத ஓவிய வித்தகர்.. ராஜா ரவிவர்மா!
சித்தார்த்தனின் புத்த பூர்ணிமா!
அனுபவம் அறிவோம்.. செலவு குறைந்த புதுவிதமான சிறந்த திருமணம்!
அழகு மாறும்.. ஆன்மா அப்படியே இருக்கும்!
நல்ல பாட்டு கேட்டா.. ஆஹா.. அடடா.. Good songs are good healers!
A Silk Wrapped in Love
S Sharmila Poem: உனக்குள் ஒருவன்!
நதியும் நீயும் ஒன்றோ!
{{comments.comment}}