சிக்கன் கறியை மிச்சம் வைக்காமல் சாப்பிட்ட அப்பா.. கோபமான மகன்.. கடைசியில் ஒரு கொலை!

Apr 06, 2023,03:04 PM IST
மங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே வீட்டில் சமைத்து வைத்திருந்த கோழிக்கறியை தனக்குத் தராமல் சாப்பிட்ட தந்தையுடன் மகன் சண்டை போட்டார். அதில் ஆத்திரமடைந்த தந்தை, கட்டையை எடுத்து அடித்ததில் மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

குடும்பத்திற்குள் என்ன மாதிரியான சண்டையெல்லாம் வருகிறது என்பதை இப்போதெல்லாம் கணிக்கவே முடிவதில்லை. மிக மிக சாதாரண விஷயங்களுக்களுக்கெல்லாம் சண்டை போட்டு கடைசியில் அது கொலையில் முடிவது சகஜமாகி வருகிறது. 

சரியாக சமைக்காத மனைவியை அடித்துக் கொன்ற கணவன், சினிமாவுக்குக் கூட்டிச் செல்லாத கணவருடன் கோபித்துக் கொண்டு மனைவி தற்கொலை என்று விதம்விதமான துயரச் சம்பவங்களை அடிக்கடி கேள்விப்படுகிறோம். அந்த வரிசையில்,  சிக்கன் ஏன் தரவில்லை என்று கேட்ட மகனை அடித்துக் கொன்றுள்ளார் ஒரு தந்தை.



தென்கனரா மாவட்டம் சுல்லியா தாலுகாவைச் சேர்ந்த குட்டிகர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஷீனா. இவரது மகன் பெயர்  சிவராம் (32) . செவ்வாய்க்கிழமையன்று வீட்டில் கோழிக்கறி சமைத்துள்ளனர். சிவராம் வெளியில் போயிருந்தார். ஷீனா சாப்பிட்டு விட்டு ஓய்வாக இருந்துள்ளார்.

வீடு திரும்பிய சிவராம் சாப்பிட உட்கார்ந்தபோது கோழிக்கறி போதுமானதாக இல்லை என்று தெரிகிறது. இதையடுத்து தந்தையுடன் சண்டைக்குப் போனார் அவர். ஏன் எல்லாத்தையும் சாப்பிட்டீங்க என்று கேட்டு வாதிட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ஷீனா, அருகில் இருந்த கட்டையை எடுத்து சிவராமை பலமாக அடித்து விட்டார் ஷீனா.

இதில் சிவராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சுப்ரமண்யா காவல்நிலைய போலீஸார் விரைந்து வந்து ஷீனாவைக் கைது செய்தனர். உயிரிழந்த சிவராமுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனராம்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்