சிக்கன் கறியை மிச்சம் வைக்காமல் சாப்பிட்ட அப்பா.. கோபமான மகன்.. கடைசியில் ஒரு கொலை!

Apr 06, 2023,03:04 PM IST
மங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே வீட்டில் சமைத்து வைத்திருந்த கோழிக்கறியை தனக்குத் தராமல் சாப்பிட்ட தந்தையுடன் மகன் சண்டை போட்டார். அதில் ஆத்திரமடைந்த தந்தை, கட்டையை எடுத்து அடித்ததில் மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

குடும்பத்திற்குள் என்ன மாதிரியான சண்டையெல்லாம் வருகிறது என்பதை இப்போதெல்லாம் கணிக்கவே முடிவதில்லை. மிக மிக சாதாரண விஷயங்களுக்களுக்கெல்லாம் சண்டை போட்டு கடைசியில் அது கொலையில் முடிவது சகஜமாகி வருகிறது. 

சரியாக சமைக்காத மனைவியை அடித்துக் கொன்ற கணவன், சினிமாவுக்குக் கூட்டிச் செல்லாத கணவருடன் கோபித்துக் கொண்டு மனைவி தற்கொலை என்று விதம்விதமான துயரச் சம்பவங்களை அடிக்கடி கேள்விப்படுகிறோம். அந்த வரிசையில்,  சிக்கன் ஏன் தரவில்லை என்று கேட்ட மகனை அடித்துக் கொன்றுள்ளார் ஒரு தந்தை.



தென்கனரா மாவட்டம் சுல்லியா தாலுகாவைச் சேர்ந்த குட்டிகர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஷீனா. இவரது மகன் பெயர்  சிவராம் (32) . செவ்வாய்க்கிழமையன்று வீட்டில் கோழிக்கறி சமைத்துள்ளனர். சிவராம் வெளியில் போயிருந்தார். ஷீனா சாப்பிட்டு விட்டு ஓய்வாக இருந்துள்ளார்.

வீடு திரும்பிய சிவராம் சாப்பிட உட்கார்ந்தபோது கோழிக்கறி போதுமானதாக இல்லை என்று தெரிகிறது. இதையடுத்து தந்தையுடன் சண்டைக்குப் போனார் அவர். ஏன் எல்லாத்தையும் சாப்பிட்டீங்க என்று கேட்டு வாதிட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ஷீனா, அருகில் இருந்த கட்டையை எடுத்து சிவராமை பலமாக அடித்து விட்டார் ஷீனா.

இதில் சிவராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சுப்ரமண்யா காவல்நிலைய போலீஸார் விரைந்து வந்து ஷீனாவைக் கைது செய்தனர். உயிரிழந்த சிவராமுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனராம்.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்