சிக்கன் கறியை மிச்சம் வைக்காமல் சாப்பிட்ட அப்பா.. கோபமான மகன்.. கடைசியில் ஒரு கொலை!

Apr 06, 2023,03:04 PM IST
மங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே வீட்டில் சமைத்து வைத்திருந்த கோழிக்கறியை தனக்குத் தராமல் சாப்பிட்ட தந்தையுடன் மகன் சண்டை போட்டார். அதில் ஆத்திரமடைந்த தந்தை, கட்டையை எடுத்து அடித்ததில் மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

குடும்பத்திற்குள் என்ன மாதிரியான சண்டையெல்லாம் வருகிறது என்பதை இப்போதெல்லாம் கணிக்கவே முடிவதில்லை. மிக மிக சாதாரண விஷயங்களுக்களுக்கெல்லாம் சண்டை போட்டு கடைசியில் அது கொலையில் முடிவது சகஜமாகி வருகிறது. 

சரியாக சமைக்காத மனைவியை அடித்துக் கொன்ற கணவன், சினிமாவுக்குக் கூட்டிச் செல்லாத கணவருடன் கோபித்துக் கொண்டு மனைவி தற்கொலை என்று விதம்விதமான துயரச் சம்பவங்களை அடிக்கடி கேள்விப்படுகிறோம். அந்த வரிசையில்,  சிக்கன் ஏன் தரவில்லை என்று கேட்ட மகனை அடித்துக் கொன்றுள்ளார் ஒரு தந்தை.



தென்கனரா மாவட்டம் சுல்லியா தாலுகாவைச் சேர்ந்த குட்டிகர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஷீனா. இவரது மகன் பெயர்  சிவராம் (32) . செவ்வாய்க்கிழமையன்று வீட்டில் கோழிக்கறி சமைத்துள்ளனர். சிவராம் வெளியில் போயிருந்தார். ஷீனா சாப்பிட்டு விட்டு ஓய்வாக இருந்துள்ளார்.

வீடு திரும்பிய சிவராம் சாப்பிட உட்கார்ந்தபோது கோழிக்கறி போதுமானதாக இல்லை என்று தெரிகிறது. இதையடுத்து தந்தையுடன் சண்டைக்குப் போனார் அவர். ஏன் எல்லாத்தையும் சாப்பிட்டீங்க என்று கேட்டு வாதிட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ஷீனா, அருகில் இருந்த கட்டையை எடுத்து சிவராமை பலமாக அடித்து விட்டார் ஷீனா.

இதில் சிவராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சுப்ரமண்யா காவல்நிலைய போலீஸார் விரைந்து வந்து ஷீனாவைக் கைது செய்தனர். உயிரிழந்த சிவராமுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனராம்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்