அகமதாபாத் : குஜராத்தில் தனது மருமகளுக்கு மாமனார் மறுமணம் செய்து வைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அம்பாஜி பகுதியை சேர்ந்தவர் பிரவீன் சிங் ராணா. இவர் தனது மூத்த மகன் சித்திராஜ்க்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 6 மாத பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்த நிலையில், கடந்த தீபாவளி பண்டிகையின் போது தனது மூத்த மகன் சித்திராஜ்சுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இந்த சம்பவம் பிரவீன் சிங் ராணா குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியது.
கணவன் இறந்த பின்பும் அம்மாவீட்டிற்கு சொல்லாமல், மாமனார் வீட்டிலேயே குழந்தையை கவனித்து கொண்டு மருமகள் இருந்து வந்துள்ளார். இதனை பார்த்த மாமனார் ராணா தனது மருமகளுக்கு மறுவாழ்க்கை அமைத்து கொடுக்கும் நோக்கில் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து தனது மருமகளுக்கு மாமனார் மாப்பிள்ளை தேடி வந்துள்ளார். இந்நிலையில், தனது நெருங்கிய நண்பர் ஒருவரின் மகனை தனது மருமகளுக்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.

இதனையடுத்து பிரவீன் சிங் ராணா தனது மருமகளுக்கு தனது உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் ஒரு தந்தை மகளுக்கு திருமணம் செய்து வைப்பது போல திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த திருமணத்தை கோலாகலமாகவும் நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் ராணா. அது மட்டுமின்றி ஒரு தந்தையை போல ஆனந்த கண்ணீருடன் தனது மருமகளை வாழ்த்தி வழி அனுப்பியுள்ளார். மருமகளும் உணர்ச்சி பொங்க மாமனாரிடம் இருந்து விடைப்பெற்று சென்ற காட்சி காண்போரை நெகிலச் செய்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!
சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி
உன் கண்ணில் நீர் வழிந்தால்!
நான் எழுதுவது கவிதையல்ல..!
Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?
Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!
FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்
பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!
கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!
{{comments.comment}}