மறைந்தார் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்!

Sep 28, 2023,02:02 PM IST

சென்னை: இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையும், வேளாண் விஞ்ஞானியுமான 98 வயதான எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். 


எம்எஸ் சுவாமிநாதன் கும்பகோணத்தில் 1925ம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தை மருத்துவர். 1942ம் ஆண்டு வங்கத்தில் ஏற்பட்ட பஞ்சம் இவரது மனதை பாதித்தது. இதனால் வேளாண்துறையை தேர்வு செய்து ஆராய்ச்சி மேற்கொண்டார். அதன் விளைவுதான் எதிர்காலத்தில் இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு இவர் வித்திட வாய்ப்பாக அமைந்தது.




கோவையில் இளநிலை பட்டமும், டெல்லியில் முதுநிலை பட்டமும் பெற்றுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். சிறந்த ஆராய்ச்சியாளரான இவர்  பல ஆராய்ச்சி கட்டுரைகள், புத்தகங்களை எழுதியுள்ளார்.


இந்தியாவில் கோதுமை புரட்சிக்கும், பசுமை புரட்சிக்கும் வித்திட்டவர்களுள் முதன்மையானவர் எம் எஸ் சுவாமிநாதன். வேளாண் துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தி உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்தவர். உணவுப் பொருட்களை நம் நாட்டில் வித்திட செய்து உணவுபொருட்களின் இறக்குமதியை குறைந்தவர். பட்டினி இல்லாத இந்தியாவை உருவாக்க எண்ணியவர் இவர்.


கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வால்வோ விருது, ராமன் மகசேசே விருது, பத்ம விருதுகள் உள்ளிட்ட 40க்கும் ஏராளமான விருதுகளை வாங்கியுள்ளார் எம்.எஸ். சுவாமிநாதன். உலகில் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.


தலைவர்கள் இரங்கல்


மறைந்த இவரது உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.எம்.எஸ். சுவாமிநாதன் மறைவுக்கு தலைவர்கள், பல்துறைப் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


எம்.எஸ். சுவாமிநாதனின் மகள்தான் உலக சுகாதார நிறுவன அதிகாரியான சவுமியா சுவாமிநாதன். கொரோ பரவல் காலகட்டத்தில் சவுமியாவின்  செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!

news

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!

news

மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்

news

பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்

news

நடித்தாலே நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது... இது ரொம்ப கொடுமையானது: சீமான்!

news

கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!

news

மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.. சீமான் கண்டனம்

news

ராகுல்காந்தி என் மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்