சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெங்களுரை சேர்ந்த பெண் கைதி சிறையில் இருந்து நேற்று தப்பியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 வார்டன்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயந்தி .2021ம் ஆண்டு நவம்பர் மாதம் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று வழக்கமான பணிக்கு பின்னர் கைதிகளின் கணக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது தான் ஜெயந்தி தப்பி சென்ற செய்தி தெரிய வந்துள்ளது.
இதற்கு பின்னர் ஜெயந்தி எவ்வாறு தப்பிச் சென்றார் என்று காவல் துறையினார் சிறையில் சோதனை செய்தனர். அப்போது , மாலை 5 மணியளவில் பார்வையாளர்கள் அறை அருகே இருந்து தப்பிச் சென்றது தெரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சிறையிலிருந்து துணிகரமாக தப்பிய பெண் கைதி ஜெயந்தியை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் சென்றுள்ளது. சிறையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னொரு படை திட்டமிட்டு வருகிறது.
மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!
சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி
உன் கண்ணில் நீர் வழிந்தால்!
நான் எழுதுவது கவிதையல்ல..!
Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?
Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!
FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்
பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!
கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!
{{comments.comment}}