புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பியோட்டம்.. பிடிக்க  2 தனிப்படை!

Dec 14, 2023,04:30 PM IST

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெங்களுரை சேர்ந்த பெண் கைதி சிறையில் இருந்து நேற்று தப்பியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 வார்டன்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயந்தி .2021ம் ஆண்டு நவம்பர் மாதம்  வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று வழக்கமான பணிக்கு பின்னர் கைதிகளின் கணக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது தான் ஜெயந்தி தப்பி சென்ற செய்தி தெரிய வந்துள்ளது.


இதற்கு பின்னர் ஜெயந்தி எவ்வாறு தப்பிச் சென்றார் என்று காவல் துறையினார் சிறையில் சோதனை செய்தனர்.  அப்போது , மாலை 5 மணியளவில் பார்வையாளர்கள் அறை அருகே இருந்து தப்பிச் சென்றது தெரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.




சிறையிலிருந்து துணிகரமாக தப்பிய பெண் கைதி ஜெயந்தியை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் சென்றுள்ளது. சிறையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு  செய்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னொரு படை திட்டமிட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

பொறுமையை சோதிக்கும் கூட்டணிக் கட்சிகள்.. அமைதியாக இருக்கும் திமுக.. என்ன நடக்கும்?

news

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட்:பிப்ரவரி 12ல் மதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ

news

தமிழகத்தில் ஆட்சியாளர்களை எதிர்த்து எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது: ஜி.கே.வாசன் பேட்டி

news

ராமதாஸ் பாமக வந்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்...திருமாவளவன் உறுதி

news

கிச்சனில் இருக்கும்போது கவனம் தோழியரே.. எண்ணெய் தீ விபத்தை.. தடுப்பது எப்படி?

news

ஒரு வாரத்துக்கு நகைக் கடை பக்கமே போகாமல் இருந்தால் தங்கம் விலை குறையுமா!?

news

பிப்ரவரி 17-ல் தமிழக இடைக்கால பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

news

இந்திய சீனியர் அணிக்கு வைபவ் வர முடியாது.. குறுக்கே நிற்கும் கெளஷிக் (ஐசிசி விதி)!

news

முகம்து சிராஜுக்கு அடித்த லக்கி பிரைஸ்.. ராணா வெளியேறினார்.. சிராஜுக்கு வாய்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்