சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டு, அங்கிருந்து துணிகரமாக தப்பியோடி பரபரப்பை ஏற்படுத்திய ஜெயந்தி, தற்போது பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயந்தி. 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் புழல் சிறையிலிருந்து தப்பி ஓடி விட்டார்.
ஆண்கள் சிறை வழியாக இவர் தப்பி போனது விசாரணையில் தெரிய வந்தது. பார்வையாளர் அறைப் பகுதி வழியாக இவர் வெளியேறியது தெரிய வந்து சிறை நிர்வாகம் அதிரச்சி அடைந்தது. புழல் சிறையிலிருந்து ஒரு கைதி தப்புவது கடந்த 17 வருடங்களில் இதுதான் முதல் முறை என்பதால் சிறைத்துறைக்குப் பெரிய சங்கடமாகி விட்டது.

இதையடுத்து பெண் கைதி ஜெயந்தியை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் தற்போது ஜெயந்தி சிக்கியுள்ளார். பெங்களூரு நிலையம் அருகே உள்ள கெங்கேரி பகுதியில் அவர் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து லிங்கசாமி தலைமையிலான போலீஸ் குழுவினர் அங்கு சென்று ஜெயந்தியைக் கைது செய்தனர்.
பொறுமையை சோதிக்கும் கூட்டணிக் கட்சிகள்.. அமைதியாக இருக்கும் திமுக.. என்ன நடக்கும்?
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட்:பிப்ரவரி 12ல் மதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ
தமிழகத்தில் ஆட்சியாளர்களை எதிர்த்து எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது: ஜி.கே.வாசன் பேட்டி
ராமதாஸ் பாமக வந்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்...திருமாவளவன் உறுதி
கிச்சனில் இருக்கும்போது கவனம் தோழியரே.. எண்ணெய் தீ விபத்தை.. தடுப்பது எப்படி?
ஒரு வாரத்துக்கு நகைக் கடை பக்கமே போகாமல் இருந்தால் தங்கம் விலை குறையுமா!?
பிப்ரவரி 17-ல் தமிழக இடைக்கால பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
இந்திய சீனியர் அணிக்கு வைபவ் வர முடியாது.. குறுக்கே நிற்கும் கெளஷிக் (ஐசிசி விதி)!
முகம்து சிராஜுக்கு அடித்த லக்கி பிரைஸ்.. ராணா வெளியேறினார்.. சிராஜுக்கு வாய்ப்பு!
{{comments.comment}}