சிக்கினார் ஜெயந்தி.. சென்னை புழல் சிறையிலிருந்து தப்பி.. பெங்களூரில் பிடிபட்டார்!

Dec 16, 2023,04:27 PM IST

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டு, அங்கிருந்து துணிகரமாக தப்பியோடி பரபரப்பை ஏற்படுத்திய ஜெயந்தி, தற்போது பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயந்தி. 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் புழல் சிறையிலிருந்து தப்பி ஓடி விட்டார். 


ஆண்கள் சிறை வழியாக இவர் தப்பி போனது விசாரணையில் தெரிய வந்தது. பார்வையாளர் அறைப் பகுதி வழியாக இவர் வெளியேறியது தெரிய வந்து சிறை நிர்வாகம் அதிரச்சி அடைந்தது. புழல் சிறையிலிருந்து ஒரு கைதி தப்புவது கடந்த 17 வருடங்களில் இதுதான் முதல் முறை என்பதால் சிறைத்துறைக்குப் பெரிய சங்கடமாகி விட்டது.




இதையடுத்து பெண் கைதி ஜெயந்தியை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் தற்போது ஜெயந்தி சிக்கியுள்ளார். பெங்களூரு நிலையம் அருகே உள்ள கெங்கேரி பகுதியில் அவர் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து லிங்கசாமி தலைமையிலான போலீஸ் குழுவினர் அங்கு சென்று ஜெயந்தியைக் கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்