ஈரோடு கிழக்கு தொகுதி.. வேட்பு மனு தாக்கல் தொடக்கம்.. முதல் ஆளாக பத்மராஜன் மனு செய்தார்!

Jan 10, 2025,08:20 PM IST

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு  தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.  முதல் ஆளாக தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் பத்மராஜன் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.


2021ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். இவர் 2023ம் ஆண்டு காலமானார். அதன்பின்னர்  ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்எல்ஏவாக  இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்  சமீபத்தில்,  உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். 


இந்நிலையில், தற்போது ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 17ம் தேதியாகும். 




இன்று முதல் ஆளாக தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் பத்மராஜன் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்தார்.  வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு மாநகராட்சி வளாகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன்  கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.


வேட்பு மனுக்களைதேர்தல் நடத்தும் மணீஸ்சிடம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே வேட்புமனுக்கள் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் 13 மற்றும் 17ம் தேதிகளில் மட்டும் வேட்புமனுக்களை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட மற்ற நாட்கள் அனைத்தும் அரசு விடுமுறை நாட்களாகும். 18ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும் வேட்புமனுவை திரும்ப பெற 20ம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?

news

வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!

news

தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி

news

அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

news

அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்

news

ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?

news

10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்

news

அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்