ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. முதல் ஆளாக தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் பத்மராஜன் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
2021ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். இவர் 2023ம் ஆண்டு காலமானார். அதன்பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் சமீபத்தில், உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார்.
இந்நிலையில், தற்போது ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 17ம் தேதியாகும்.
இன்று முதல் ஆளாக தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் பத்மராஜன் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு மாநகராட்சி வளாகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வேட்பு மனுக்களைதேர்தல் நடத்தும் மணீஸ்சிடம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே வேட்புமனுக்கள் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் 13 மற்றும் 17ம் தேதிகளில் மட்டும் வேட்புமனுக்களை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட மற்ற நாட்கள் அனைத்தும் அரசு விடுமுறை நாட்களாகும். 18ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும் வேட்புமனுவை திரும்ப பெற 20ம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}