மத்திய பட்ஜெட் 2025: 8வது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Feb 01, 2025,09:38 AM IST

டில்லி :  2025-2026 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார். இதில் என்னென்ன அறிவிப்புகள் வரும் என தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31ம் தேதியான நேற்று ஜனாதிபதி திரெளபதி முர்முவின் உரையுடன் துவங்கியது. மொத்தம் இரண்டு பிரிவுகளாக நடைபெறும் பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி ஜனவரி 31ம் தேதி துவங்கி, பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறும். பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி மார்ச் 10ம் தேதி துவங்கி, ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறும்.


நேற்று துவங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜனாதிபதி உரையை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-2025ம் நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இதில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி எனப்படும் மொத்தம் உள்நாட்டு உற்பத்தி 6.3 சதவீதம் முதல் 6.8 சதவீதமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இது கடந்த 6 மாதத்திற்கான பொருளாதார ஆய்வு அறிக்கையாகும். லோக்சபா தேர்தலுக்கு முன்பு 2024ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி 2022-2023 நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை ஏற்கனவே நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 




இந்நிலையில் இன்று காலை பட்ஜெட் உரையுடன் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று, பட்ஜெட் உரைக்கு ஒப்புதல் பெற்றார் நிர்மலா சீதாராமன். தொடர்ந்து பார்லிமென்ட்டில் நிதித்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். இதைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு லோக்சபாவில் தனது எட்டாவது பட்ஜெட் உரையை அவர் ஆற்ற உள்ளார்.  இதைத் தொடர்ந்து அவர் வாசித்த பட்ஜெட் உரை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படும். 


இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் வேளாண் துணையில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படலாம். அதாவது ரூ.10 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியாகலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இது உறுதி செய்யப்படாத தகவல் என்றாலும் இது அதிகமானவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் உரை தயார் செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?

news

ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு

news

Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

news

குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்

news

Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்

news

சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு

news

ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

news

"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!

news

சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்