சென்னை விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்!

Jan 27, 2026,05:47 PM IST

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பயணிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது.


இன்று காலை சுமார் 11.30 மணியளவில், பயணிகள் வருகை பகுதியில் உள்ள ஒரு மின்சாரக் கட்டுப்பாட்டு அறையில் திடீரென கரும்புகை வெளியேறியது. சில நிமிடங்களிலேயே தீ மளமளவெனப் பரவத் தொடங்கியது. அங்கிருந்த மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.




விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன், விமான நிலையத்தின் உள்ளேயே தயார் நிலையில் இருந்த தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. சுமார் 30 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பாதுகாப்பு கருதி, அந்தப் பகுதியில் இருந்த பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.


அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை. இருப்பினும், மின்கசிவு காரணமாகப் புகை மூட்டம் நிலவியதால், சில மணி நேரம் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. மின் கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது நிலைமை சீராக உள்ளது. விமான நிலையச் செயல்பாடுகள் வழக்கம்போலத் தொடங்கிவிட்டன என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

லட்சியக் கனவை முன்னின்று நிறைவேற்றப் போவது நீங்கதான்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து

news

அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. நீங்க யாரும் ஹர்ட் ஆகாதீங்க.. தவெக தலைவர் விஜய்

news

கோவையை அதிர வைத்த.. மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 3 பேருக்கும் சாகும் வரை சிறைத் தண்டனை!

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026 விஐபி தொகுதிகள்...எந்த தொகுதியில் யார் போட்டியிட வாய்ப்பு?

news

இந்தியா உதவியது ஏன்?... வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

news

கேஸ் சிலிண்டர் விலை உயர்விற்கு திமுக தான் காரணம்...அண்ணாமலை சொன்ன காரணம்

news

ஈரான் போர் எப்பதான் முடியும்.. ஏன் இந்த சண்டை.. அடுத்து என்னதான் நடக்கும்?

news

வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு

news

ஓம்பிர்லாவை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்: மார்ச் 9 அன்று லோக்சபாவில் முக்கிய நகர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்