புகை மூட்டம் அது நேற்று.. இன்று பனி மூட்டம்.. சாலைகள் ஸ்தம்பித்தன.. வாகனங்கள் தடுமாற்றம்!

Jan 15, 2024,09:15 AM IST

சென்னை: சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பனியுடன் போகி புகையும் சேர்ந்து ஸ்தம்பிக்க வைத்தன என்றால் இன்று கடும் பனி மூட்டத்தால் சாலைகளில் வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.


தமிழ்நாட்டில் நேற்று காலை கடும் பனி மூட்டம் காணப்பட்டது. கூடவே போகி புகையும் சேர்ந்து கொள்ளவே காலையில் கடும் புகை மற்றும் பனி மூட்டமாக காணப்பட்டது. இதனால் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் செல்வதில் தடுமாற்றம் ஏற்பட்டது. காலை 9 மணி வரை பனி மூட்டமும், புகை மூட்டமும் விலகாமல் இருந்து வந்தது.



இதன் காரணமாக வாகனங்கள் விளக்குகளை எரிய விட்டபடி செல்ல நேரிட்டது. விமானப் போக்குவரத்தும் கடும் பாதிப்பை சந்தித்தது. இந்த நிலையில் இன்றும் காலையில் பனி மூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் இன்றும் நெடுஞ்சாலைப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.


காலை 9 மணி வரை பனி விலகாமல் இருந்து வந்ததால் விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் சென்றன. காலை விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பனி மூட்டம் சில நாட்களுக்குத் தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

news

2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

news

வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

news

விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு

news

ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

news

இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!

news

மோன்தா புயல் தீவிரம்... ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

news

ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்

news

தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்

அதிகம் பார்க்கும் செய்திகள்