சென்னை: சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பனியுடன் போகி புகையும் சேர்ந்து ஸ்தம்பிக்க வைத்தன என்றால் இன்று கடும் பனி மூட்டத்தால் சாலைகளில் வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் நேற்று காலை கடும் பனி மூட்டம் காணப்பட்டது. கூடவே போகி புகையும் சேர்ந்து கொள்ளவே காலையில் கடும் புகை மற்றும் பனி மூட்டமாக காணப்பட்டது. இதனால் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் செல்வதில் தடுமாற்றம் ஏற்பட்டது. காலை 9 மணி வரை பனி மூட்டமும், புகை மூட்டமும் விலகாமல் இருந்து வந்தது.

இதன் காரணமாக வாகனங்கள் விளக்குகளை எரிய விட்டபடி செல்ல நேரிட்டது. விமானப் போக்குவரத்தும் கடும் பாதிப்பை சந்தித்தது. இந்த நிலையில் இன்றும் காலையில் பனி மூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் இன்றும் நெடுஞ்சாலைப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
காலை 9 மணி வரை பனி விலகாமல் இருந்து வந்ததால் விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் சென்றன. காலை விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பனி மூட்டம் சில நாட்களுக்குத் தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு... வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும்: எடப்பாடி பழனிச்சாமி
நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது: நயினார் நாகேந்திரன்
டி20 உலகக் கோப்பை: இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவில் பாகிஸ்தான் தீவிரம்?
நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!
தைப்பூசம்: முருகப்பெருமானை போற்றிக் கொண்டாடும் திருநாள்!
தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழா: ஆனந்த் அறிவிப்பு
கொலம்பியா எல்லையில் விபத்துக்குள்ளான விமானம்.. எம்.பி உள்பட 15 பேர் பலி
பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்த தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்காயாளர்கள்!
{{comments.comment}}