புகை மூட்டம் அது நேற்று.. இன்று பனி மூட்டம்.. சாலைகள் ஸ்தம்பித்தன.. வாகனங்கள் தடுமாற்றம்!

Jan 15, 2024,09:15 AM IST

சென்னை: சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பனியுடன் போகி புகையும் சேர்ந்து ஸ்தம்பிக்க வைத்தன என்றால் இன்று கடும் பனி மூட்டத்தால் சாலைகளில் வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.


தமிழ்நாட்டில் நேற்று காலை கடும் பனி மூட்டம் காணப்பட்டது. கூடவே போகி புகையும் சேர்ந்து கொள்ளவே காலையில் கடும் புகை மற்றும் பனி மூட்டமாக காணப்பட்டது. இதனால் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் செல்வதில் தடுமாற்றம் ஏற்பட்டது. காலை 9 மணி வரை பனி மூட்டமும், புகை மூட்டமும் விலகாமல் இருந்து வந்தது.



இதன் காரணமாக வாகனங்கள் விளக்குகளை எரிய விட்டபடி செல்ல நேரிட்டது. விமானப் போக்குவரத்தும் கடும் பாதிப்பை சந்தித்தது. இந்த நிலையில் இன்றும் காலையில் பனி மூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் இன்றும் நெடுஞ்சாலைப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.


காலை 9 மணி வரை பனி விலகாமல் இருந்து வந்ததால் விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் சென்றன. காலை விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பனி மூட்டம் சில நாட்களுக்குத் தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பார் போற்றும் பாரதி!

news

ஓடி விளையாடு பாப்பா.. அதுவும் இந்த மாதிரி விளையாடு பாப்பா... உடம்புக்கு ரொம்ப நல்லது!

news

சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!

news

தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை... வெள்ளியின் விலையும் சற்று குறைவு தான்!

news

Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!

news

கண்ணீரைத் துடைக்க.. இறைவனே இறங்கி வந்து நிற்பான்!

news

ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!

news

Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!

news

புட்டு சாப்பிட்டிருப்பீங்க.. முள்ளங்கி புட்டு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா.. செமத்தியான டிஷ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்