டெல்லி மக்கள் அளித்த தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறேன்.. பாஜகவுக்கு வாழ்த்துகள்.. கெஜ்ரிவால்

Feb 08, 2025,05:18 PM IST

டெல்லி: டெல்லி மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன்.பாஜவுக்கு வாழ்த்துகள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன் என டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


70 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவையில் கடந்த 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆம்ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், பாஜக தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்து வந்தது. 


புதுடில்லி சட்டமன்றத் தொகுதியில் கெஜ்ரிவால் மற்றும் பாஜக வேட்பாளர் இடையே கடும் போட்டி நிலவியது. பாஜக வேட்பாளர் பர்வேஷ் சிங் சாகிப் வர்மா 28 ஆயிரத்து 448 வாக்குகள் பெற்ற நிலையில், கெஜ்ரிவால் அவரை விட 3 ஆயிரத்து 182 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்துள்ளார். 18 தொகுதிகளில் அதிகாரப்பூர்வமாக பாஜக வெற்றி பெற்றுள்ளது.




கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி பீடத்தில் இருந்த முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்தார். அவரை தொடர்ந்து டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் தோல்வி அடைந்தார். மணீஷ் சிசோடியாவை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தர்வீந்தர் சிங் மர்வா 34 ஆயிரத்து 632 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.


தற்போதைய முதலமைச்சரான அதிஷி கல்காஜி தொகுதியில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக தலைவரும் முன்னாள் மக்களவை எம்பியுமான ரமேஷ் பிதுரியை 3 ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.


தொடர்ந்து டெல்லியில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பாஜகவினர் அதிக அளவு குவியத் தொடங்கியுள்ளனர். அத்துடன் பாஜகவினர் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், டெல்லி மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். பாஜகவுக்கு வாழ்த்துகள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என நம்புகிறேன். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் என்று டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்