ஒற்றுமையால் அதிமுகவை மீட்டெடுக்க .. ஓபிஎஸ் அறைகூவல் .. இணைவார்களா பிரிந்தவர்கள்?

Jun 06, 2024,10:11 PM IST

சென்னை:  லோக்சபா தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பினரும் தோல்வியை தழுவிய நிலையில் ஒற்றுமையால் அதிமுகவை மீட்டெடுக்க  வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓ.பி.எஸ் வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 


மேலும் எம்ஜிஆர் ஜெயலலிதா  உருவாக்கிய இக்கட்சியை உடைத்து விடக்கூடாது எனவும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், வேண்டுகோள் விடுத்தும் வருகின்றனர்.


18 ஆவது லோக்சபா தேர்தல் இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற்று வந்தது. இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி, மே ஒன்றாம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் என மொத்தம் ஏழு கட்ட தேர்தல்களும் நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்றது.  தமிழ்நாடு புதுச்சேரியில் திமுக 40 க்கு 40 என அனைத்து தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் அதிமுக ஒரு தொகுதியைக் கூட வெற்றி பெறவில்லை. மாறாக 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. குறிப்பாக இந்த லோக்சபா தேர்தலில் அதிமுக வாக்கு எண்ணிக்கையில் பல இடங்களில் மூன்றாவது  இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.




அதிமுகவில் நிலவிய உட்கட்சி பூசலால் அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது. இதனால் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஓபிஎஸ் தனியாக போட்டியிட்டார். இதில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 40 தொகுதிக்குமான அதிமுக வேட்பாளர்களும், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓ பன்னீர் செல்வமும் படுதோல்வியை தழுவினர்.


இரு தரப்பினரும் படு தோல்வியை சந்தித்துள்ள நிலையில் அன்பு தொண்டர்களே கலங்க வேண்டாம். வருங்காலம் நமக்கானது வாருங்கள். வெற்றி அடைவோம். புதிய சகாப்தம் படைப்போம். சிலரின் சொந்த கருத்துக்காக அதிமுகவை பிரிப்பது தவறு. ஜெயலலிதாவின் இல்லம் உங்கள் அனைவரையும் வரவேற்கிறது. அதிமுக அழிவதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது எனக் கூறி எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் என அனைவரும் இணைய வேண்டும் என நேற்று அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா அறிக்கை விடுத்து இருந்தார்.


தற்போது  முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஒற்றுமையால் அதிமுகவை மீட்டெடுக்க அறைக்கூவல் விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,


அதிமுகவினர் அனைவரும்  ஒன்றிய வேண்டும். இனியும் சமாதானம் சொல்லி அதிமுக தொண்டர்களை தோல்விக்கு பழக்குவது பாவ காரியமாகும். ஒற்றைக் குச்சியை உடைப்பது சுலபம் கற்றைக்குச்சியை முறிப்பது கடினம். ஒற்றுமையால் அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என  வேண்டுகோள் விடுத்துள்ளார். 


ஓபிஎஸ்ஸின் இந்த அறிக்கையால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்து எடப்பாடி பழனிச்சாமியின் முடிவு என்னவாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?

news

Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

news

Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!

news

Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)

news

Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!

news

தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்