சென்னை: லோக்சபா தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பினரும் தோல்வியை தழுவிய நிலையில் ஒற்றுமையால் அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓ.பி.எஸ் வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் எம்ஜிஆர் ஜெயலலிதா உருவாக்கிய இக்கட்சியை உடைத்து விடக்கூடாது எனவும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், வேண்டுகோள் விடுத்தும் வருகின்றனர்.
18 ஆவது லோக்சபா தேர்தல் இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற்று வந்தது. இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி, மே ஒன்றாம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் என மொத்தம் ஏழு கட்ட தேர்தல்களும் நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்றது. தமிழ்நாடு புதுச்சேரியில் திமுக 40 க்கு 40 என அனைத்து தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் அதிமுக ஒரு தொகுதியைக் கூட வெற்றி பெறவில்லை. மாறாக 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. குறிப்பாக இந்த லோக்சபா தேர்தலில் அதிமுக வாக்கு எண்ணிக்கையில் பல இடங்களில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அதிமுகவில் நிலவிய உட்கட்சி பூசலால் அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது. இதனால் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஓபிஎஸ் தனியாக போட்டியிட்டார். இதில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 40 தொகுதிக்குமான அதிமுக வேட்பாளர்களும், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓ பன்னீர் செல்வமும் படுதோல்வியை தழுவினர்.
இரு தரப்பினரும் படு தோல்வியை சந்தித்துள்ள நிலையில் அன்பு தொண்டர்களே கலங்க வேண்டாம். வருங்காலம் நமக்கானது வாருங்கள். வெற்றி அடைவோம். புதிய சகாப்தம் படைப்போம். சிலரின் சொந்த கருத்துக்காக அதிமுகவை பிரிப்பது தவறு. ஜெயலலிதாவின் இல்லம் உங்கள் அனைவரையும் வரவேற்கிறது. அதிமுக அழிவதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது எனக் கூறி எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் என அனைவரும் இணைய வேண்டும் என நேற்று அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா அறிக்கை விடுத்து இருந்தார்.
தற்போது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஒற்றுமையால் அதிமுகவை மீட்டெடுக்க அறைக்கூவல் விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
அதிமுகவினர் அனைவரும் ஒன்றிய வேண்டும். இனியும் சமாதானம் சொல்லி அதிமுக தொண்டர்களை தோல்விக்கு பழக்குவது பாவ காரியமாகும். ஒற்றைக் குச்சியை உடைப்பது சுலபம் கற்றைக்குச்சியை முறிப்பது கடினம். ஒற்றுமையால் அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஓபிஎஸ்ஸின் இந்த அறிக்கையால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்து எடப்பாடி பழனிச்சாமியின் முடிவு என்னவாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
{{comments.comment}}