ஆளும் கட்சிக்கு ஒரு நீதி.. எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியா? .. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி

Jan 08, 2025,06:48 PM IST

சென்னை: ஆளும் கட்சிக்கு ஒரு நீதி? எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியா?  மாலையில் ஆளும் கட்சி போராட்டம் அறிவித்து காலையில் நடத்துகிறது. சட்டத்தை வளைக்காதீர்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று சட்டசபையில் பேசினார்.


தமிழக சட்டசபையில் இன்று  அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. இந்த கவனஈர்ப்பு தீர்மானம் மீது ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், சென்னை காவல் ஆணையர் யாரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார். கைதான ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் என்று செய்திகள் வந்துள்ளன. பெண்களின் பாதுகாப்பில் திமுக அலட்சியம் காட்டி வருகிறது. முதல்வர் தற்போது வரை அண்ணா பல்கலை விவகாரத்தில் விளக்கம் தரவில்லை.




கைதான ஞானசேகரின் செல்போனில் அவர் யாரிடம் பேசினாரோ அந்த தொலைபேசி எண்ணை வைத்து எளிதாக கண்டுபிடித்து விடலாமே? அதனை ஏன் செய்யவில்லை. அந்த சார் யார் என்பதை இந்த அரசு வெளியிட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்களை வெளியே கசிய விட்டது எப்படி?. மேலும், முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டு, புகார் அளிக்க வருவோருக்கு ஒரு அச்ச உணர்வை இந்த அரசு ஏற்படுத்தி விட்டது. 


போராடியவர்கள் மீது அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது இந்த அரசு. போராடிய திமுகவினர் கைது செய்யப்படவில்லை. ஆனால், அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராடிய திமுகவினர் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறார்கள். ஆனால், கைது செய்யப்படவில்லை.


தமிழ்நாடு முழுவதும் யார் அந்த சார் என்ற கேள்வி தான் எழுந்துள்ளது. திமுக ஞானசேகரன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். தொடர்ந்து பாலியல் சம்பவம் நடைபெறாத நாளே தமிழகத்தில் இந்த 4 ஆண்டுகளில் இல்லை என்றார்.


அப்போது குறுக்கிட்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பாலியல் சம்பவங்கள் தமிழ்நாட்டில் மட்டும் நடைபெறவில்லை. எல்லா ஆட்சியிலும் தான் நடைபெறுகிறது. டெல்லி, மும்பையில் நடைபெறவில்லையா? பொள்ளாச்சியில் தான் நடைபெறவில்லையா என்று பதிலடி கொடுத்தார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

RIP S Janaki: நான் போன பின்னும் நீ வாழ வேண்டும்.. பாட்டுக்குயில் ஜானகி அம்மா!

news

மறைந்தார் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி.. 3 தலைமுறையாக ரசிகர்களை மகிழ வைத்த வானம்பாடி!

news

Vietnam boat tragedy: வியட்நாட் துயரத்தில் 10 தமிழர்கள் பலி.. முதல்வர் சி. ஜோசப் விஜய் வேதனை

news

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.. உங்களிடம் கேட்கப்படவுள்ள 33 கேள்விகள்!

news

அண்ணாமலையின்'We The Leaders' பொள்ளாச்சியில் நாளை முதல் மாநாடு

news

வாரிசுகளுக்கு அரசு வேலை வேண்டும் : பாமக அன்புமணி வலியுறுத்தல்

news

Jananayagan release update விரைவில் ஜனநாயகன் ரிலீஸ்...போஸ்டருடன் வந்த புதிய அப்டேட்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு திருவிழா 2026 நாளை துவக்கம்

news

இந்தியாவில் OTT தளங்களுக்கும் சென்சார் சான்று: மத்திய அரசு திட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்