டெல்லி: நாடு முழுவதும் கட்டணமின்றி ஆதார் அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆதார் அட்டை என்பது ஒரு தனி மனிதனின் அடையாளத்தைக் குறிக்கும் 12 இலக்க எண்களைக் கொண்ட ஆவணமாகும். அதேபோல் இது தனி மனிதனின் அடையாளம் மற்றும் முகவரி சான்றுக்கான அத்தியாவசிய தேவை ஆகும். மேலும் அரசு சார்பில் வழங்கப்படும் எந்த ஒரு திட்டங்கள் மற்றும் சலுகைகளை பெற ஆதார் அட்டை மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
குறிப்பாக ஆதார் எண் பதிவு செய்யப்பட்ட தேதியில் இருந்து ஒவ்வொரு பத்து வருடங்களுக்கு ஒருமுறை ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை புதுப்பிப்பது என்பது ஆதார் அட்டை தொடர்பாக மோசடிகளை தவிர்க்கவும், மக்கள் தொகையை கணக்கிடவும் அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் நாடு முழுவதும் ஆதார் எண்களை புதுப்பிக்க செப்டம்பர் 14 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக (UIDAI)இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் கட்டணமின்றி ஆதார் அட்டையை புதுப்பிக்கலாம். 14ஆம் தேதிக்குள் புதுப்பிக்கவில்லை என்றால் செப்டம்பர் 14ஆம் தேதிக்குப் பிறகு கட்டணம் செலுத்தினால் மட்டுமே புதுப்பிக்க முடியும்.
ஆதார் அட்டையை புதுப்பிக்க வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, வங்கிப் புத்தகம் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தோடு ஆதார் சேவை மையத்தை அணுக வேண்டும். இந்த ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு ஆதார் அட்டையை புதுப்பிக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}