டெல்லி : டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போதே துவங்கப்பட்டு வருகிறது. ஜி20 மாநாட்டை ஒட்டி டில்லியில் உள்ள அலுவலகங்கள், பள்ளிகள், வங்கிகள், கடைகள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜி20 மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் இதற்காக டெல்லி வர உள்ளனர். இதனால் பாதுகாப்பு கருதி டெல்லியில் உள்ள அனைத்து அரசு, தனியார், முனிசிபல் கார்பரேஷன் அலுவலகங்கள், பள்ளிகள், வங்கிகள், நிதித்துறை நிறுவனங்கள், கடைகள் ஆகியன செப்டம்பர் 8 ம் தேதி முதல் 10 ம் தேதி வரை மூன்று நாட்கள் மூடப்பட உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 8 முதல் 10 ம் தேதி வரை பொது விடுமுறை விட வேண்டும் என டெல்லி போலீஸ் சிறப்பு கமிஷனர், டெல்லி மாநில அரசின் தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜி20 மாநாடு நடக்கும் நாட்களில் டெல்லியில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
டெல்லியில் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன பிரதமர் ஷி ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்டின், பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மாக்ரோன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் 23, புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ம் தேதி தேர்தல்.. மே 4ல் வாக்கு எண்ணிக்கை
TN Assembly Elections: தமிழ்நாட்டில் 75,032 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.. தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்.. இதையெல்லாம் பின்பற்றணும்!
விஜய் பையில் கத்திரிக்கோல்.. ஆதவ் அர்ஜூனாவிடம் மது பாட்டில்.. பரபரத்த சென்னை ஏர்போர்ட்!
எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிப்பு...தமிழகத்தில் வேகமெடுக்கும் அரசு பணிகள்
Iran-Israel War: மேற்கு ஆசியப் போர் எதிரொலி - சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு
10 ஏவுகணைகளை ஏவி அதிரடி காட்டிய கிம்மின் வடகொரியா.. கிலியில் அண்டை நாடுகள்!
வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு மின்சார மானியம் அறிவிப்பு
மதுரை விமான நிலையம்.. திருத்தம்.. மதுரை சர்வதேச விமான நிலையம்.. மத்திய அரசு ஆணை!
{{comments.comment}}