டெல்லி : டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போதே துவங்கப்பட்டு வருகிறது. ஜி20 மாநாட்டை ஒட்டி டில்லியில் உள்ள அலுவலகங்கள், பள்ளிகள், வங்கிகள், கடைகள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜி20 மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் இதற்காக டெல்லி வர உள்ளனர். இதனால் பாதுகாப்பு கருதி டெல்லியில் உள்ள அனைத்து அரசு, தனியார், முனிசிபல் கார்பரேஷன் அலுவலகங்கள், பள்ளிகள், வங்கிகள், நிதித்துறை நிறுவனங்கள், கடைகள் ஆகியன செப்டம்பர் 8 ம் தேதி முதல் 10 ம் தேதி வரை மூன்று நாட்கள் மூடப்பட உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 8 முதல் 10 ம் தேதி வரை பொது விடுமுறை விட வேண்டும் என டெல்லி போலீஸ் சிறப்பு கமிஷனர், டெல்லி மாநில அரசின் தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜி20 மாநாடு நடக்கும் நாட்களில் டெல்லியில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
டெல்லியில் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன பிரதமர் ஷி ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்டின், பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மாக்ரோன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}