டெல்லி: காஸாவில் உள்ள அல் அஹிலி அரபு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி மக்கள் 500 பேர் உயிர் இழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கலும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரிடையே கடந்த 12 நாட்களாக போர் நடந்து வருகிறது. இப்போரில் இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் கடுமையாக தாக்கி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் மடிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் காஸாவில் உள்ள அல் அஹிலி அரபு மருத்துமனை மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியதில் 500க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு தாங்கள் காரணம் இல்லை என்றும் ஹமாஸ் ஏவிய ராக்கெட்தான் தவறுதலாக அஹில் அராப் மருத்துவமனை மீது விழுந்து விட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதை காஸா சுகதாரத் துறை இதை மறுத்து, இஸ்ரேல் ராணுவம்தான் இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "காஸாவில் உள்ள அல் அஹிலி அரபு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பல உயிர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. பலியானவர்களின் குடும்பங்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள் இருக்கும்.
தற்போது நடந்து வரும் போரில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருவது கவலை அளிப்பதாக உள்ளது. இது சீரியஸானது. தொடர்ந்து கவலை தருகிறது. இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
கோவை, நீலகிரிக்கு அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
கட்ட பஞ்சாயத்து செய்யவா மக்கள் ஓட்டு போட்டார்கள்? பூவை ஜெகன் மூர்த்திக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
ஐபிஎல் லைட்டை நாங்கதான் ஹேக் பண்ணோம் தெரியுமா.. காமெடி செய்த பாகிஸ்தான் அமைச்சர்!
ரஜினிகாந்த், விஜயகாந்தை விட விஜய் என்ன பெரிய ஆளா? தவாக தலைவர் வேல்முருகன்
2026ல் தொடங்குகிறது சென்சஸ் கணக்கெடுப்பு.. முதலில் லடாக், காஷ்மீரில் தொடங்கும்.. மத்திய அரசு
பாமகவின் இரு தலைவர்களும் பேச வேண்டும்: பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி
தமிழ்நாட்டை கத்தி.. அரிவாள்.. துப்பாக்கி பாதைக்கு கொண்டு சென்றுள்ள திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி
இஸ்ரேல் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால்.. எங்களுக்காக பாகிஸ்தான் பதில் தரும்.. ஈரான்
இஸ்ரேலுக்கு முழுமையான பதிலடி தருவோம்.. அதுவரைக்கும் போர் நிறுத்தம் கிடையாது.. ஈரான் அறிவிப்பு
{{comments.comment}}