டெல்லி: காஸாவில் உள்ள அல் அஹிலி அரபு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி மக்கள் 500 பேர் உயிர் இழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கலும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரிடையே கடந்த 12 நாட்களாக போர் நடந்து வருகிறது. இப்போரில் இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் கடுமையாக தாக்கி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் மடிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் காஸாவில் உள்ள அல் அஹிலி அரபு மருத்துமனை மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியதில் 500க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு தாங்கள் காரணம் இல்லை என்றும் ஹமாஸ் ஏவிய ராக்கெட்தான் தவறுதலாக அஹில் அராப் மருத்துவமனை மீது விழுந்து விட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதை காஸா சுகதாரத் துறை இதை மறுத்து, இஸ்ரேல் ராணுவம்தான் இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "காஸாவில் உள்ள அல் அஹிலி அரபு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பல உயிர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. பலியானவர்களின் குடும்பங்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள் இருக்கும்.
தற்போது நடந்து வரும் போரில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருவது கவலை அளிப்பதாக உள்ளது. இது சீரியஸானது. தொடர்ந்து கவலை தருகிறது. இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
 
                                                                            இன்றைக்கு மழை வருமா வராதா? எங்கெல்லாம் மழை வரும்... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
 
                                                                            எடப்பாடி பழனிச்சாமி தான் எங்கள் எதிரி.. ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒன்றிணைந்து பகிரங்க பேட்டி
 
                                                                            கரூர் அதிர்ச்சியிலிருந்து மீண்டுட்டாரா விஜய்.. சிறப்பு பொதுக்குழுவால்.. தொண்டர்களிடையே உற்சாகம்
 
                                                                            பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
 
                                                                            இந்தியாவில்.. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 லட்சம் பெண் பிரதிநிதிகள்.. பி.வில்சன் பெருமிதம்
 
                                                                            திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும் உயிர்பலி: நயினார் நகேந்திரன் வேதனை!
 
                                                                            தேவர் ஜெயந்தி விழா... முத்துராமலிங்க தேவருக்கு மனமார்ந்த அஞ்சலி: பிரதமர் மோடியின் பதிவு!
 
                                                                            சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா முத்துராமலிங்கத் தேவர்: விஜய்
 
                                                                            கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது திமுக அரசு: அண்ணாமலை
{{comments.comment}}