திருப்பதி: அடுத்த மாதம் கோவாவில் எனக்கு திருமணம் என்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்து வீட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பைரவா, ரஜினிமுருகன், ரெமோ, சர்க்கார், மாமன்னன், சண்டைக்கோழி 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் அவர் இடம் பிடித்துள்ளார்.தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மொழிகளிலும் நடித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக ரிவால்வர் ரீட்டா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். விரைவில் இந்த படம் ரிலீசாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். தெறி படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்த படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தை அட்லி தயாரிக்க காலீஸ் இயக்குகிறார். இந்த படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், கடந்த 27ம் தேதி சமூக வலைத்தளத்தில் தனது காதலர் ஆண்டவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, 15 ஆண்டுகால உறவு, எப்போதும் தொடரும் கவுண்டிங்... ஆண்டனி-கீர்த்தி என குறிப்பிட்டு தனது காதலரை அறிமுகம் செய்திருந்தார். இதனையடுத்து, இன்று தனது குடும்பத்தாருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்கு அடுத்த மாதம் கல்யாணம். அதற்காக சாமி தரிசனம் செய்ய வந்தேன். திருமணம் கோவாவில் நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எங்கள் தெருவிலும் பிள்ளையார்.. அழகிய சிங்கரின் என்பா
எந்தன் ஈசனே! சிவனே!
short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!
சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!
பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்
"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!
{{comments.comment}}