திருப்பதி: அடுத்த மாதம் கோவாவில் எனக்கு திருமணம் என்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்து வீட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பைரவா, ரஜினிமுருகன், ரெமோ, சர்க்கார், மாமன்னன், சண்டைக்கோழி 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் அவர் இடம் பிடித்துள்ளார்.தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மொழிகளிலும் நடித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக ரிவால்வர் ரீட்டா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். விரைவில் இந்த படம் ரிலீசாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். தெறி படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்த படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தை அட்லி தயாரிக்க காலீஸ் இயக்குகிறார். இந்த படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், கடந்த 27ம் தேதி சமூக வலைத்தளத்தில் தனது காதலர் ஆண்டவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, 15 ஆண்டுகால உறவு, எப்போதும் தொடரும் கவுண்டிங்... ஆண்டனி-கீர்த்தி என குறிப்பிட்டு தனது காதலரை அறிமுகம் செய்திருந்தார். இதனையடுத்து, இன்று தனது குடும்பத்தாருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்கு அடுத்த மாதம் கல்யாணம். அதற்காக சாமி தரிசனம் செய்ய வந்தேன். திருமணம் கோவாவில் நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வயசுக்கு முக்கியம் தரணும்.. இளம் நடிகையுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மறுத்த மாதவன்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் முதல் வார வசூல் இவ்வளவா.. அதிர வைக்கும் டேட்டா!
கூலி நடிப்புக்குக் கிடைக்கும் அப்ளாஸ்.. ஸ்ருதி ஹாசன் செம ஹேப்பியாம் !
புலி வேட்டையாடும்போது அணில்கள் குறுக்கமறுக்க ஓடுது... விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்!
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி... நீலகிரி, கோவை மலைப்பகுதிகளுக்கு கனமழை... வானிலை மையம்
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கட்சி பேதம் இன்றி அனைத்து எம்.பிக்களும் ஆதரிக்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி
உணர்வு ததும்பும் மதுரை மண்ணில்... இதயம் திறந்து... இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன்: விஜய்!
ஆடி போயிருச்சு ஆவணி வந்தாச்சு.. டாப்புக்கு வந்துருவோம் மக்களே.. நம்பிக்கையோடு செயல்படுங்க!
தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் - பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}