சென்னை: இளையதளபதி விஜய் நடித்த கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் அனைத்து ஷோக்களும் ஹவுஸ் ஃபுல் ஆனது. இதனால் அடுத்த ஒரு வாரம் வரை கில்லி படத்தை திரையிடுவதாக திரைப்பட உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
விஜய் படம் என்றாலே ரசிகர்களுக்கு சொல்லவா வேண்டும். அது பழைய படமாக இருந்தாலும் சரி.. புதுப் படமாக இருந்தாலும் சரி.. விஜய் ரசிகர்கள் அதனைக் கொண்டாடி மகிழ்வர். தற்போது முண்ணனி நட்சத்திரங்களின் சூப்பர் ஹிட் திரைப்படங்களை ரீ ரிலீஸ் செய்வது பேஷன் ஆகி வருகிறது. அந்த வரிசையில் தளபதி விஜய் நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படமான கில்லி திரைப்படம் 20 வருடங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இப்போதைய விஜய் ரசிகர்கள் பலருக்கும் இந்தப் படம் வந்தபோது பிறந்திருக்கவே மாட்டார்கள்.. எனவே அவர்களுக்கெல்லாம் இப்படம் செம ட்ரீட்டாக இருக்கிறது. இதனால் இளம் தலைமுறை விஜய் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். சுமார் 600 தியேட்டர்களுக்கு மேல் கில்லி திரைப்படம் ரீ ரிலீஸாகி உள்ளது.
இப்படத்தை திரையில் காணும் ரசிகர்கள் விசில் அடித்து உற்சாகமாக நடனமாடி கொண்டாடி வருகின்றனர். இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் சிங்கப்பூர் அமெரிக்காவிலும் நேற்றே ரிலீஸ் செய்யப்பட்டு முன்பதிவு டிக்கெட் முழுவதும் தீர்ந்துவிட்டதாம். கில்லி ரீரிலாஸ் செய்யப்பட்டுள்ள தியேட்டர்களில் அனைத்து ஷோக்களும் ஹவுஸ்புல் ஆகி விட்டதாம். அதனால் இப்படத்தை மேலும் ஒரு வாரம் வரை திரையிடுவதாக திரைப்பட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கில்லி திரைப்படம்:
இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான மாஸ் திரைப்படமான கில்லி படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, தாமு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அப்போது இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், நல்ல வரவேற்பை பெற்றது.
காமெடியிலும், ஆக்ஷனிலும் வித்தியாசமான திரைக்கதையை கொண்டுள்ள இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. இதில் நடிகர் பிரகாஷ்ராஜ், விஜயின் நடிப்பு இன்று வரை ரசிகர்களிடம் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இது தவிர நடிகர் பிரகாஷ்ராஜ் பேசும் ஹாய் செல்லம் என்ற டயலாக் இன்று வரை மிகப் பிரபலமாக உள்ளது நினைவிருக்கலாம்.
குறிப்பாக இப்படத்தில் வரும் காமெடி டயலாக்கான இன்னைக்கு தைப்பூசம் இல்ல.. அதுக்காக முருகனை மறக்க முடியுமா.. என்ற வசனத்தை இளம் தலைமுறையினர்கள் தங்கள் இல்லங்கள் தோறும் தற்போது வரை கலாய்த்து வருகின்றனர்.
IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!
துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!
பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
{{comments.comment}}