சென்னை: தங்கம் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று சவரனுக்கு தங்கம் ரூ.160 குறைந்து ரூ.6660க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலையும் குறைந்தே உள்ளது.
தங்கம் விலை கடந்த 3 மாதங்களாகவே ஏற்ற இறக்கங்கம் அதிகரித்து காணப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு விலையாக இருந்து வருகிறது தங்கம். இந்த விலை ஏற்ற இறக்கங்கள் அதிகளவில் நடுத்தர மக்களை பாதித்து வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு காரணமாகவே தங்கம் விலையில் அதிகளவில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது.
மேலும், இந்தியா மட்டும் இன்றி, தற்போது வெளி நாடுகளில் வாழும் மக்களும் அதிகப்படியாக தங்கத்தில் முதலீடு செய்யும் நிலை அதிகரித்து வருவதினால் தான் நகை விலை ஏற்ற இறக்கம் கண்டு வருவதாக வல்லுனர்கள் கூறி வருகின்றனர். நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து இருந்தது இன்று சவரனுக்கு ரூ. 160 குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை

இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,660 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 20 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.160 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,280 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,266 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,128 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்துள்ளது.
சென்னையில் வெள்ளி விலை
நேற்று உயர்ந்திருந்த வெள்ளி இன்று குறைந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை 0.60 காசுகள் குறைந்து ரூ.95.20 க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 761.60 ஆக உள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளியின் விலைரூ.95,800 இருந்த விலை இன்று ரூ.95,200க்கு விற்கப்படுகிறது.
RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா
RIP Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது
இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!
இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!
பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு
சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?
பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்
Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!
{{comments.comment}}