சென்னை: கடந்த சனிக்கிழமை அன்று சவரனுக்கு ரூ.160 குறைந்திருந்த தங்கம், இன்றும் சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகைப்பியர்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளியன்று அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலையில் ஒரே நாளில் 3 முறை உயர்ந்தது. இந்த விலை ஏற்றம் நகைப்பிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது என்றாலும், வாடிக்கையாளர்கள் முன்னரே நகைகளை புக்கிங் செய்ததினால் இந்த விலை ஏற்றத்தில் இருந்து தப்பித்ததாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் அன்று ஒரு நாள் மட்டும் சவரனுக்கு ரூ.1240 உயர்ந்தது. அட்சய திருதிக்கு அடுத்த நாளான சனிக்கிழமை நகை விலை குறைந்திருந்தது. சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில், அதனைத் தொடர்ந்து இன்றும் சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை...

இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,725 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 25 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.200 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,800 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,336 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,688 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்துள்ளது.
சென்னையில் வெள்ளி விலை...
இன்றைய வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.இன்று 1 கிராம் வெள்ளி விலை 0.50 காசுகள் குறைந்து ரூ.90 ரூபாயாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 720 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.90,000க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதும் தங்கத்தின் விலை உயர காரணமாக கூறப்பட்ட நிலையில் இன்று விலை குறைந்துள்ளது சற்று ஆறுதல் தருவதாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்று நகை விலை குறைந்து இருந்தாலும், தொடர்ந்து நகை விலை உயர்ந்து வருவதால், நகையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா மட்டுமின்றி உலகளவில் பல்வேறு நாட்டினை சேர்ந்தவர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டி வருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்
மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்.. கை, கால்களை சுத்தமாக கழுவ செவிலியர்கள் அறிவுரை!
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
சூப்பர் ஆண்டி.. பொறணி பேசியே 2 வீடு வாங்கி செட்டிலான கொலம்பியா மிரியம்!
நோட்டிஃபிகேஷன் மனிதர்கள் – போன் வைப்ரேட் ஆனா மட்டும் போதாது மச்சா!
மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
{{comments.comment}}