சென்னை: கடந்த சனிக்கிழமை அன்று சவரனுக்கு ரூ.160 குறைந்திருந்த தங்கம், இன்றும் சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகைப்பியர்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளியன்று அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலையில் ஒரே நாளில் 3 முறை உயர்ந்தது. இந்த விலை ஏற்றம் நகைப்பிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது என்றாலும், வாடிக்கையாளர்கள் முன்னரே நகைகளை புக்கிங் செய்ததினால் இந்த விலை ஏற்றத்தில் இருந்து தப்பித்ததாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் அன்று ஒரு நாள் மட்டும் சவரனுக்கு ரூ.1240 உயர்ந்தது. அட்சய திருதிக்கு அடுத்த நாளான சனிக்கிழமை நகை விலை குறைந்திருந்தது. சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில், அதனைத் தொடர்ந்து இன்றும் சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை...

இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,725 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 25 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.200 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,800 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,336 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,688 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்துள்ளது.
சென்னையில் வெள்ளி விலை...
இன்றைய வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.இன்று 1 கிராம் வெள்ளி விலை 0.50 காசுகள் குறைந்து ரூ.90 ரூபாயாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 720 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.90,000க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதும் தங்கத்தின் விலை உயர காரணமாக கூறப்பட்ட நிலையில் இன்று விலை குறைந்துள்ளது சற்று ஆறுதல் தருவதாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்று நகை விலை குறைந்து இருந்தாலும், தொடர்ந்து நகை விலை உயர்ந்து வருவதால், நகையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா மட்டுமின்றி உலகளவில் பல்வேறு நாட்டினை சேர்ந்தவர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டி வருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}