அட்சய திரிதியை முடிந்ததில் இருந்து.. தொடர் சரிவில் தங்கம்: இன்றைய ரேட் என்ன தெரியுமா?

May 13, 2024,10:43 AM IST

சென்னை: கடந்த சனிக்கிழமை அன்று சவரனுக்கு ரூ.160 குறைந்திருந்த தங்கம், இன்றும் சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகைப்பியர்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த வெள்ளியன்று அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலையில் ஒரே நாளில் 3 முறை உயர்ந்தது. இந்த விலை ஏற்றம் நகைப்பிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது என்றாலும், வாடிக்கையாளர்கள் முன்னரே நகைகளை புக்கிங் செய்ததினால் இந்த விலை ஏற்றத்தில் இருந்து தப்பித்ததாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் அன்று ஒரு நாள் மட்டும் சவரனுக்கு ரூ.1240 உயர்ந்தது. அட்சய திருதிக்கு அடுத்த நாளான சனிக்கிழமை நகை விலை குறைந்திருந்தது. சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில், அதனைத் தொடர்ந்து இன்றும் சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது.


சென்னையில் இன்றைய தங்கம் விலை...




இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,725 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 25 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.200 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,800 ரூபாயாக உள்ளது. 


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,336 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,688 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்துள்ளது. 


சென்னையில் வெள்ளி விலை...


இன்றைய வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.இன்று 1 கிராம் வெள்ளி விலை  0.50 காசுகள் குறைந்து ரூ.90 ரூபாயாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 720 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை  ரூ.90,000க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவை பொறுத்தவரை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதும் தங்கத்தின் விலை உயர காரணமாக கூறப்பட்ட நிலையில் இன்று விலை குறைந்துள்ளது சற்று ஆறுதல் தருவதாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்று நகை விலை குறைந்து இருந்தாலும், தொடர்ந்து நகை விலை உயர்ந்து வருவதால், நகையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதாக நிபுணர்கள்  தெரிவித்து வருகின்றனர். 


இந்தியா மட்டுமின்றி உலகளவில் பல்வேறு நாட்டினை சேர்ந்தவர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டி வருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்